முகப்பு |
புன்னை |
49. நெய்தல் |
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் |
||
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே; |
||
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப் |
||
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே; |
||
5 |
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, |
|
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச் |
||
சென்று நாம் அறியின், எவனோ-தோழி! |
||
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ |
||
முன்றில் தாழையொடு கமழும் |
||
10 |
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? | உரை |
தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.-நெய்தல் தத்தனார்
|
63. நெய்தல் |
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர் |
||
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண், |
||
கல்லென் சேரிப் புலவற் புன்னை |
||
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் |
||
5 |
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், |
|
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப, |
||
பசலை ஆகி விளிவதுகொல்லோ- |
||
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் |
||
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி |
||
10 |
திரை தரு புணரியின் கழூஉம் |
|
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே? | உரை | |
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்
|
74. நெய்தல் |
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை |
||
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், |
||
நிறையப் பெய்த அம்பி, காழோர் |
||
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் |
||
5 |
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
|
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ் |
||
புது மணற் கானல் புன்னை நுண் தாது, |
||
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் |
||
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் |
||
10 |
கண்டல் வேலிய ஊர், 'அவன் |
|
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! | உரை | |
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்
|
76. பாலை |
வருமழை கரந்த வால் நிற விசும்பின் |
||
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு |
||
ஆல நீழல் அசைவு நீக்கி, |
||
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, |
||
5 |
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!- |
|
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை |
||
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் |
||
கானல் வார் மணல் மரீஇ, |
||
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே! | உரை | |
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.-அம்மூவனார்
|
78. நெய்தல் |
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி |
||
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய, |
||
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், |
||
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல், |
||
5 |
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, |
|
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்; |
||
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி |
||
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும், |
||
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா |
||
10 |
வலவன் கோல் உற அறியா, |
|
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே! | உரை | |
வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்
|
91. நெய்தல் |
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப் |
||
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் |
||
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு |
||
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை |
||
5 |
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், |
|
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை, |
||
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும் |
||
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் |
||
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய, |
||
10 |
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் |
|
கடு மாப் பூண்ட நெடுந் தேர் |
||
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே? | உரை | |
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.-பிசிராந்தையார்
|
94. நெய்தல் |
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில், |
||
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்; |
||
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி- |
||
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ |
||
5 |
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் |
|
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் |
||
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின் |
||
ஆர்வம் உடையர் ஆகி, |
||
மார்பு அணங்குறுநரை அறியாதோனே! | உரை | |
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளந்திரையனார்
|
96. நெய்தல் |
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய், |
||
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை, |
||
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே, |
||
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி, |
||
5 |
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் |
|
துவரினர் அருளிய துறையே; அதுவே, |
||
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல் |
||
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ, |
||
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு |
||
10 |
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, |
|
பைஇப் பையப் பசந்தனை பசப்பே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது.-கோக்குளமுற்றனார்
|
167. நெய்தல் |
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை |
||
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய் |
||
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற |
||
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும் |
||
5 |
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த |
|
பயன் தெரி பனுவற் பை தீர் பாண! |
||
நின் வாய்ப் பணி மொழி களையா-பல் மாண் |
||
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் |
||
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த |
||
10 |
இறை ஏர் எல் வளைக் குறுமகள் |
|
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே. | உரை | |
தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.
|
235. நெய்தல் |
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல், |
||
அரவு வாள் வாய முள் இலைத் தாழை |
||
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் |
||
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம் |
||
5 |
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், |
|
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி, |
||
கண்டனம் வருகம் சென்மோ-தோழி!- |
||
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத, |
||
படு மணிக் கலி மாக் கடைஇ, |
||
10 |
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. | உரை |
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.
|
249. நெய்தல் |
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை |
||
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும், |
||
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் |
||
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர, |
||
5 |
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் |
|
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ, |
||
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத் |
||
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண், |
||
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி, |
||
10 |
அம்பல் மூதூர் அலர் எழ, |
|
சென்றது அன்றோ, கொண்கன் தேரே? | உரை | |
வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்
|
278. நெய்தல் |
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை, |
||
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ, |
||
பொன்னின் அன்ன தாது படு பல் மலர் |
||
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் |
||
5 |
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை |
|
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்- |
||
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி |
||
குளம்பினும் சேயிறா ஒடுங்கின; |
||
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே. | உரை | |
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.- உலோச்சனார்
|
323. நெய்தல் |
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை |
||
நடுவணதுவேதெய்ய-மடவரல் |
||
ஆயமும் யானும் அறியாது அவணம் |
||
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் |
||
5 |
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை |
|
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்: |
||
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த |
||
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, |
||
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் |
||
10 |
தெரி மணி கேட்டலும் அரிதே; |
|
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே. | உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
327. நெய்தல் |
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின், |
||
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச் |
||
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!- |
||
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர் |
||
5 |
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து, |
|
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய |
||
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ் |
||
புன்னை ஓங்கிய கானற் |
||
தண்ணம் துறைவன் சாயல் மார்பே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது.-அம்மூவனார்
|