முகப்பு |
வேங்கை |
13. குறிஞ்சி |
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய |
||
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!- |
||
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த |
||
பகழி அன்ன சேயரி மழைக் கண், |
||
5 |
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் |
|
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் |
||
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி |
||
மயில் அறிபு அறியாமன்னோ; |
||
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே. | உரை | |
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்
|
28. பாலை |
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும், |
||
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும். |
||
அன்னை போல இனிய கூறியும், |
||
கள்வர் போலக் கொடியன்மாதோ- |
||
5 |
மணி என இழிதரும் அருவி, பொன் என |
|
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து, |
||
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் |
||
ஓடு மழை கிழிக்கும் சென்னி, |
||
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே! | உரை | |
பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.-முதுகூற்றனார்
|
51. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக் |
||
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல் |
||
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் |
||
5 |
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு |
|
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென, |
||
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே; |
||
பெருந் தண் குளவி குழைத்த பா அடி, |
||
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு |
||
10 |
பேதை ஆசினி ஒசித்த |
|
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே? | உரை | |
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்
|
112. குறிஞ்சி |
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல் |
||
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் |
||
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு, |
||
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் |
||
5 |
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, |
|
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித் |
||
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய், |
||
மலை இமைப்பது போல் மின்னி, |
||
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே? | உரை | |
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்
|
125.குறிஞ்சி |
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை |
||
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி, |
||
நல் அரா நடுங்க உரறி, கொல்லன் |
||
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும் |
||
5 |
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, |
|
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை |
||
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று |
||
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல |
||
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் |
||
10 |
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, |
|
மென் தினை நெடும் போர் புரிமார் |
||
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே. | உரை | |
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
|
151. குறிஞ்சி |
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும், |
||
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் |
||
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை |
||
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் |
||
5 |
வாரற்கதில்ல-தோழி!-கடுவன், |
|
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி, |
||
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த |
||
செம் முக மந்தி செய்குறி, கருங் கால் |
||
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர், |
||
10 |
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் |
|
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் |
||
குன்ற நாடன் இரவினானே! | உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்
|
157. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் |
||
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து, |
||
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப |
||
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில், |
||
5 |
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், |
|
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக் |
||
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட |
||
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை |
||
அம் பூந் தாது உக்கன்ன |
||
10 |
நுண் பல் தித்தி மாஅயோளே. | உரை |
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்
|
168. குறிஞ்சி |
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் |
||
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், |
||
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் |
||
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் |
||
5 |
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
|
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- |
||
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், |
||
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், |
||
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக |
||
10 |
ஆரம் கமழும் மார்பினை, |
|
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? | உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது.
|
222. குறிஞ்சி |
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை |
||
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் |
||
கை புனை சிறு நெறி வாங்கி, பையென, |
||
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று, |
||
5 |
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் |
|
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன் |
||
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில், |
||
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது, |
||
பெருங் களிறு பிளிறும் சோலை அவர் |
||
10 |
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? | உரை |
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
232. குறிஞ்சி |
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம் |
||
குளவித் தண் கயம் குழையத் தீண்டி, |
||
சோலை வாழை முணைஇ, அயலது |
||
வேரல் வேலிச் சிறுகுடி அலற, |
||
5 |
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் |
|
மா மலை நாட!-காமம் நல்கென |
||
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை |
||
வீ உக வரிந்த முன்றில், |
||
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே. | உரை | |
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்
|
257. குறிஞ்சி |
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ, |
||
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின், |
||
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு |
||
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்- |
||
5 |
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் |
|
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம் |
||
நல் மலை நாட!-நயந்தனை அருளாய், |
||
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக் |
||
கடு மா வழங்குதல் அறிந்தும், |
||
10 |
நடு நாள் வருதி; நோகோ யானே. | உரை |
தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.-வண்ணக்கன் சோருமருங்குமரனார்
|
259. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ |
||
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல், |
||
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி, |
||
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப் |
||
5 |
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
|
சாரல் ஆரம் வண்டு பட நீவி, |
||
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி |
||
அரிய போலக் காண்பேன்-விரி திரைக் |
||
கடல் பெயர்ந்தனைய ஆகி, |
||
10 |
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே? | உரை |
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.-கொற்றங் கொற்றனார்
|
313. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ, |
||
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப, |
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து, |
|
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ, |
||
5 |
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு |
|
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள் |
||
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் |
||
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின் |
||
மீள்குவம் போலத் தோன்றும்-தோடு புலர்ந்து |
||
10 |
அருவியின் ஒலித்தல் ஆனா, |
|
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.-தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
|
334. குறிஞ்சி |
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
||
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை |
||
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப, |
||
5 |
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- |
|
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள், |
||
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி; |
||
மின்னு வசி விளக்கத்து வருமெனின், |
||
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே? | உரை | |
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
|
373. குறிஞ்சி |
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ, |
||
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை |
||
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி, |
||
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு |
||
5 |
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, |
|
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் |
||
பா அமை இதணம் ஏறி, பாசினம் |
||
வணர் குரற் சிறு தினை கடிய, |
||
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே? | உரை | |
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
396. குறிஞ்சி |
பெய்து போகு எழிலி வைகு மலை சேர, |
||
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப, |
||
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள், |
||
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ, |
||
5 |
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை |
|
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று |
||
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்! |
||
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் |
||
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பல் நாள் |
||
10 |
காமர் நனி சொல் சொல்லி, |
|
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே? | உரை | |
தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.
|