|
|
''சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் |
|
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த |
|
வண்டற் பாவை வன முலை முற்றத்து, |
|
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் |
5 |
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, |
|
எல்லி வந்தன்றோ தேர்?'' எனச் சொல்லி, |
|
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும் |
|
என் நோக்கினளே அன்னை; நாளை |
|
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின், |
10 |
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி |
|
நறும் பூங் கானல் வந்து, அவர் |
|
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே. |
உரை |
|
தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்
|
|
''குருதி வேட்கை உரு கெழு வய மான் |
|
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
|
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
|
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?'' எனப் பல புலந்து, |
|
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
|
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
|
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
|
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. |
உரை |
|
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
|
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் |
|
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ, |
|
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய், |
|
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை! |
5 |
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; |
|
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் |
|
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக, |
|
யாரும் இல் ஒரு சிறை இருந்து, |
|
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே! |
உரை |
|
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.
|
|
அம்ம வாழி, தோழி! கைம்மாறு |
|
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க் |
|
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும், |
|
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை, |
5 |
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் |
|
தனி நிலை இதணம் புலம்பப் போகி, |
|
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை, |
|
குன்ற வெற்பனொடு நாம் விளையாட, |
|
இரும்பு கவர்கொண்ட ஏனற் |
10 |
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? |
உரை |
|
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
|
அருளாயாகலோ, கொடிதே!-இருங் கழிக் |
|
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி, |
|
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும் |
|
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே- |
5 |
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென, |
|
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் |
|
நீர் அலைத் தோற்றம் போல, |
|
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே. |
உரை |
|
களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.
|
|
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை, |
|
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின், |
|
மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்! |
|
சால்பும் செம்மையும் உடையை ஆதலின், |
5 |
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், |
|
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்! |
|
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய், |
|
சிறுகுபு சிறுகுபு செரீஇ, |
|
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே? |
உரை |
|
நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து, ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
|
|
''தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே |
|
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே; |
|
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ! |
|
தெளிந்தனம் மன்ற; தேயர் என் உயிர்'' என, |
5 |
ஆழல், வாழி-தோழி!-நீ; நின் |
|
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு, |
|
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய, |
|
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் |
|
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள் |
10 |
இன் இசை முரசின் இரங்கி, மன்னர் |
|
எயில் ஊர் பல் தோல் போலச் |
|
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே. |
உரை |
|
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-நக்கீரர்
|
|
சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து |
|
ஓமை நீடிய கான் இடை அத்தம், |
|
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள் |
|
கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை |
5 |
தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் |
|
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை, |
|
வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர், |
|
சில் வளை, பல் கூந்தலளே, அவளே; |
|
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை |
10 |
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் |
|
தந்தைதன் ஊர் இதுவே; |
|
ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே! |
உரை |
|
பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-கயமனார்
|
|
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை |
|
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு, |
|
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி, |
|
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து, |
5 |
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க் |
|
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் |
|
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி, |
|
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர், |
|
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய, |
10 |
பைபய இமைக்கும் துறைவன் |
|
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே! |
உரை |
|
வன்புறை எதிரழிந்தது.-பேரி சாத்தனார்
|
|
கண்ணி கட்டிய கதிர அன்ன |
|
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
|
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், |
|
''சாறு'' என நுவலும் முது வாய்க் குயவ! |
5 |
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- |
|
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் |
|
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி, |
|
''கை கவர் நரம்பின் பனுவற் பாணன் |
|
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று, |
10 |
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் |
|
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்'' எனவே. |
உரை |
|
தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, ''இங்ஙனம் சொல்லாயோ?'' என்று குயவற்குச் சொல்லியது.-கூடலூர்ப் பல் கண்ணனார்
|
|