தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 4

    A01124  கம்பரின் கவிநயம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் கம்பரின் கவிநயம் பற்றியது. கம்பர் கவிதைகளோடு ஒன்றுபடும் உலகக் கவிஞர்களின் கவித்திறம் பற்றியும் கம்பராமாயணத்தில் அமைந்துள்ள சொல்லாட்சி, ஓசைநயம், வருணனை, கற்பனை ஆகியன பற்றியும் இப்பாடம் விளக்கி உள்ளது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

    • கம்பர் கவிநயத்தின் பெருமையை அறியலாம்.

    • உலக மகா கவிஞர்களுக்கும் கம்பருக்கும் இருக்கும் கவிதை ஒற்றுமைப் பண்புகளை அறிந்து கொள்ளலாம்.

    • ஹோமர், ஷேக்ஸ்பியர், ஸ்பென்சர், மில்டன் முதலிய உலகக் கவிஞர்களுக்கு இணையாகக் கம்பர் தன் கவிதைகளைப் படைத்துள்ள திறத்தை ஒப்பியல் முறையில் அறியலாம்.

    • கம்பர் கவிதைகளில் அமைந்து கிடக்கும் சொல்லாட்சி, ஓசைநயம், வருணனை, கற்பனை ஆகியவற்றைப் பாடல்கள் துணை கொண்டு அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:25:58(இந்திய நேரம்)