Primary tabs
6.2 ஒலி மாற்றங்கள்
மராட்டியர் காலத்தில் தமிழகத்து அரசியலில் பிற மொழியாளர் செல்வாக்கு மிகுந்தது. முதலில் இசுலாமியர் படையெடுப்பும் பின்னர் தெலுங்கு மொழி பேசும் நாயக்கர் ஆட்சியும், பின்னர் ஏற்பட்ட மராத்தியர் ஆட்சியும் தமிழ்மொழி ஒலியிலும் மொழி அமைப்பிலும் பல மாற்றங்களை உருவாக்கின.
இலக்கண ஆசிரியர்கள் வடமொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று கூறி வந்த போதும், கல்வெட்டுகளில் முதலிலிருந்தே வடமொழி எழுத்துகள் - கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப் பட்டன. இலக்கியத்தில் முதன் முதலில் 15ஆம் நூற்றாண்டிலிருந்தே அதாவது அருணகிரியாரின் திருப்புகழிலிருந்தே ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, முதலிய எழுத்துகள் எழுத்துத் தமிழில் கலந்தன. தமிழ் மரபுக்கு மாறாக, ரகரமும் (ரீங்காரம், ருது போன்ற சொற்கள்) லகரமும் (லோகம், லீலை போன்ற சொற்கள்) சொல்லுக்கு முதலில் வரத் தொடங்கின.
நாயக்கர் காலத் தமிழில் வழங்கப்பட்ட உயிர், மெய் எழுத்துகளே மராட்டியர் காலத் தமிழிலும் வந்து வழங்கின.
உயிர் எழுத்துகள்இ ஈ உ ஊஎ ஏ ஒ ஓஅ ஆமெய் எழுத்துகள்க் ச் ட் ற் த் ப் ங் ஞ் ண் ன் ம் ய் ந் ழ் ர் ல் வ் ள்சோழர், நாயக்கர் கால ஒலி மாற்றங்கள் பல மராட்டியர் காலத்தில் நிலை பெற்றுவிட்டன என்று கூறலாம். மராட்டியர் கால ஒலி மாற்றங்களை இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் போன்ற ஆதாரங்களின் துணை கொண்டு அறிய முடியும்.
• அகர மாற்றம்
அகரம்; இகரமாக, எகரமாக, ஐகாரமாகப் பல இடங்களில் வந்து வழங்கப்படுகின்றது.
அ) அகர இகர மாற்றம் (அ > இ)
சான்று:
கஜம்>கிஜம்பரிபாலனம்>பரிபாலினம்ஆ) அகர எகர மாற்றம் (அ > எ)
இம்மாற்றம் சோழர் காலத்திலிருந்தே தொடர்ந்து வந்தாலும் மராட்டியர் காலத்தில் மிகுந்து காணப்படுகிறது.
சான்று:
கங்கை>கெங்கைகருடன்>கெருடன்தசமி>தெசமிலட்சுமணன்>லெட்சுமணன்ரகுநாதன்>ரெகுநாதன்யஸ்வத்தம்பா>யெஸ்வத்தம்பாஇ) அகர ஐகார மாற்றம்
உயிர்க்குறில் அகரமானது உயிர்நெடில் ஐகாரமாகவும் மாறுபட்டுள்ளது.
சான்று:
மற்றுமுள்ள > மைத்துமுள்ள
• இகர மாற்றம்
இகர ஒலியானது அகரமாகவும், எகரமாகவும், யிகரமாகவும், யெகரமாகவும் பலவிடங்களில் பயின்று வந்துள்ளது.
அ) இகர அகர மாற்றம் (இ > அ)
மராட்டியர் காலத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இம்மாற்றம் காணப்படுகின்றது.
சான்று:
மதிள் > மதள்
ஆ) இகர எகர மாற்றம் (இ > எ)
சான்று:
நிலம்>நெலம்விலை>வெலைஇ) இகர யிகர மாற்றம் (இ > யி)
அரை உயிரான யகரத்தின் சாயல் பெற்ற இகரம் யிகரமாக ஒலிக்கப்படும் இடங்களும் உண்டு.
சான்று:
இதின்மேல்>யிதின் மேல்இதுக்கு>யிதுக்குஇந்த>யிந்தஇவர்கள்>யிவர்கள்இலாகா>யிலாகாஇறை>யிறைஇந்தியக் கரை>யிந்தியக் கரைஈ) இகர யெகர மாற்றம் (இ > யெ)
இகரம் எகரமாக மாறுவதுடன் யகரச் செல்வாக்குப் பெற்று யெகரமாகவும் மாற்றமடைகின்றது.
சான்று:
இலை>எலை>யெலைபிணை>பெணை• ஈகார மாற்றம்
உயிர்க்குறில் இகரத்தைப் போலவே உயிர்நெடில் ஈகாரமும் மேற்கூறிய மாற்றங்களை அடைகின்றது.
அ) ஈகார யீகார மாற்றம் (ஈ > யீ)
சான்று:
ஈசன்>யீசன்ஈழம்>யீழம்• எகர மாற்றம் (எ > யெ)
எகர ஒலியானது யகர ஒலிச் சாயலைப் பெற்று யெகரமாக ஒலிக்கும் இடங்களைக் காணலாம்.
சான்று:
எருது>யெருதுஎப்பேர்ப்பட்ட>யெப்பேர்ப்பட்டஎங்களுர்>யெங்களூர்எல்லை>யெல்லைஎழுதி>யெழுதி• ஏகார மாற்றம் (ஏ > யே)
எகரத்தைப் போன்று ஏகாரமும் யகர ஒலியின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
சான்று:
ஏழு>யேழுஏகோசி>யேகோசி• ஐகார மாற்றம் (ஐ அய்)
உயிர் நெடில் ஐகாரமானது ‘அய்’ என ஒலிக்கப்படும் இடங்கள் பல உள்ளன.
சான்று:
கை எழுத்து>கய் எழுத்துஐ நெஸ>அய் நெஸ்ஐவேஜி>அய்வேஜிஐயங்கார்>அய்யங்கார்கையிலே>கய்யிலேவைக்கிறது>வய்க்கிறதுதையலம்மை>தய்யலம்மை• உகர மாற்றம்
உயிரொலி உகரமானது சில இடங்களில் இகரமாகவும் சில இடங்களில் எகரமாகவும் ஒலிக்கப்படுகின்றது.
அ) உகர இகர மாற்றம் (உ > இ)
சான்று:
புஞ்சை>பிஞ்சைபுறம்>பிறம்ஆ) உகர எகர மாற்றம் (உ > எ)
சான்று:
சுவர் > செவர்
இவ்வாறு உயிரொலிகள் பல இடங்களில் மாற்றமடைந்து மராட்டியர் காலத் தமிழ்மொழி வளர்ச்சியைப் பறைசாற்றி நிற்கின்றன.
மெய்யொலியானது மராட்டியர் காலத்தில் மிகுந்த மாற்றங்களுக்கு உள்ளாகியது. தமிழகத்தைத் தமிழர் ஆளாத சூழலிலும், பிறமொழிகளின் செல்வாக்கினாலும் மெய்யொலிகள் பல மாற்றங்களைச் சந்திக்க வேண்டிய சூழலில் வேறுபாடுகள் பல அடைந்துள்ளன.
• சகர மாற்றம் (ச > த)
வல்லிடை ஒலியான சகரம் பல்லொலியாக மாறுகிறது.
சான்று:
சண்டேசுவரர்>தண்டேசுவரர்சாசனம்>சாதனம்• றகர மாற்றம்
மராட்டியர் கால றகர ஒலியானது தகரமாகவும், டகரமாகவும் ரகரமாகவும் காணக்கிடக்கின்றது.
அ) றகர தகர மாற்றம் (ற > த)
தற்காலத் தமிழில் காணப்படும் றகர தகர மாற்றம் சோழர் காலத்திலேயே காணப்பட்டாலும் மராட்டியர் காலத்தில் மிகுந்துள்ளது. றகரம் இரட்டிக்கும் போது மட்டுமே தகரமும் இரட்டித்து இத்தகைய மாற்றம் ஏற்படுகின்றது எனலாம்.
சான்று:
மற்றும்>மத்தும்இற்றை>இத்தைபெற்ற>பெத்தஆற்றுக்கு>ஆத்துக்குமுற்றிலும்>முத்திலும்கற்ற>கத்தகிணற்றில்>கிணத்தில்வற்றாத>வத்தாதநேற்று>நேத்துபிதற்றி>பிதத்திகற்றவர்>கத்தவர்ஆ) றகர டகர மாற்றம் (ற > ட)
மேலும் றகரம் டகரமாக ஒலிக்கும் இடங்களும் உண்டு.
சான்று:
வென்றோன்>வெண்டோன்இருக்கின்ற>இருக்கிண்டஉற்சாகம்>உட்சாகம்இ) றகரமானது மேலும் பல மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளது.
ற>க, ன, ண, சதெற்கு>தெக்க(ற > க)மணிக்குன்றம்>மனிக்குன்னம்(ற > ன)கொன்ற>கொண்ண(ற > ண)நாற்சாரி>நாச்சாரி(ற > ச)ஈ) றகர ரகர மாற்றம் (ற > ர)
றகர ரகர ஒருங்கிணைவு பல்லவர் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்த போதும் மராட்டியர் காலத் தமிழில் மிகுந்துள்ளதைக் காண முடிகிறது.
சான்று:
ஆறு>ஆரு பொறுக்க>பொருக்கஅறியாத>அரியாத மறக்க>மரக்கபதற>பதர உறவாடி>உரவாடிநூறு>நூரு>• தகர சகர மாற்றம் (த்த > ச்ச)
றகரம் தகரமானதைப் போலவே தகரமும் சகரமாகிற இடங்கள் பல உள்ளன. தகரம் இரட்டித்து வரும்போது சகரமும் இரட்டித்து இத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது எனலாம்.
சான்று:
அவித்த>அவிச்சநடப்பித்த>நடப்பிச்சபிறப்பித்தோம்>பிறப்பிச்சோம்• பகர வகர மாற்றம் (ப > வ)
இம்மாற்றம் தமிழ்மொழியில் மராட்டியர் காலத்தில் எங்கோ ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது.
சான்று:
பாவாசி > வாவாசி
• ரகர றகர மாற்றம் (ர > ற)
அக்காலக் கட்டத்தில் ரகரமானது றகரமாகப் பலவிடங்களில் ஒலிக்கப்பட்டுள்ளது. றகர ரகர ஒருங்கிணைவே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சான்று:
தெரிய>தெறியமாரன்>மாறன்நெருக்கு>நெறுக்குராத்திரி>றாத்திரிராணி>றாணிராஜா>றாஜாஅரண்மனை>அறண்மனைபெரிய>பெறியவரிசை>வறிசைநகரம்>நகறம்அவர்கள்>அவற்கள்தர்மம்>தற்மம்பண்ணினார்>பண்ணினாற்செய்தார்>செய்தாற்• நகர னகர மாற்றம்
நகர னகர ஒருங்கிணைவு காரணத்தால் பலவிடங்களில் நகரம் னகரமாகக் காணப்படுகின்றது.
சான்று:
நம்>னம்நாம்>னாம்நாங்கள்>னாங்கள்நாடு>னாடுநாழிகை>னாழிகைநாணயில்>னாணயில்நாலாசாதி>னாலாசாதிநாயக்கர்>னாயக்கர்நாச்சியார்>னாச்சியார்நாட்டாமை>னாட்டாமை• னகர மாற்றம்
னகர ஒலியானது மராட்டியர் காலத்தில் ணகரமாகவும் ளகரமாகவும் சில இடங்களில் ஒலிக்கப்பட்டுள்ளது. ணகரமாக ஒலிக்கப்படும்போது, அடுத்துள்ள றகரம் டகரமாகிறது.
அ) னகர டகர மாற்றம் (ன > ண)
சான்று:
செல்லா நின்ற>செல்லா நிண்டவென்றோன்>வெண்டோன்ஆ) னகர ளகர மாற்றம் (ன > ள)
சான்று:
புத்திரன்>புத்திராள்பவுத்திரன்>பவுத்திராள்• வகர பகர மாற்றம் (வ > ப)
மராட்டியர் காலத் தமிழில் சில இடங்களில் வகர ஒலியானது பகரமாகக் காணப்படுகின்றது.
சான்று:
அசுவமேதம்>அசுபமேதம்ரேவதி>ரேபதி• ழகர, ளகர, ஷகர மாற்றம்
இம்மூன்று மாற்றங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாக விளங்குகின்றன.
அ) ழகர ளகர மாற்றம் (ழ > ள)
இம்மாற்றங்களும் பல்லவர் சோழர் காலங்களிலேயே காணப்படுகின்றன.
சான்று:
கீழத்தெரு>கீளத்தெருசோழ>சோளபழைய>பளையபழம் பஞ்சாரம்>பளம் பஞ்சாரம்ஆ) ழகர ஷகர மாற்றம் (ழ > ஷ )
வடமொழிச் செல்வாக்கால் சிலவிடங்களில் தமிழ் ஒலிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சான்று:
சோழ மண்டலம் > சோஷ மண்டலம்
இ) ளகர ழகர மாற்றம்
ழகரம் ளகரமாவதைப் போல ளகரமும் ழகரமாக மாறுவது இக்காலக் கட்டத்தில் ஏற்பட்ட ஒலி மாற்றமாக உள்ளது.
சான்று:
வளமை > வழமை
ஈ) ஷகர ழகர மாற்றம்
தமிழ் வடமொழித் தாக்கம் பெற்றது போல வடமொழி ஷகரமும் தமிழின் சிறப்பு ஒலியான ழகரமாக ஒலிக்கப்படுகின்றது.
சான்று:
அபிஷேகம்>அபிழேகம்பாஷை>பாழைபிரதோஷம்>பிரதோழம்தோஷம்>தோழம்புருஷோத்துமன்>புருழோத்துமன்கிஷ்ணதேவராயர்>கிழ்ணதேவராயர்பாஷை>பாழைதோஷம்>தோழம்ரிஷப>ரிழபஇவ்வாறாக மெய்யொலிகள் நாம் எதிர்பாராதவாறு பற்பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதற்குச் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் சான்றுகள் பல காணப்படுகின்றன.