தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.1 புதிய இரு மார்க்கங்கள்

  • 6.1 புதிய இரு மார்க்கங்கள்

    தமிழகத்தில் இசுலாமிய, கிறித்துவ சமயங்களின் தோற்றம்

    இசுலாம், கிறித்துவம் ஆகிய இரு சமயங்கள் தமிழகத்திற்கு வந்த வரலாறு ஆயத்தக்கது. வணிகத் தொடர்பு என்ற அளவில் அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்கும் முன்பே தொடர்பு இருந்தது. பண்பாட்டு நிலையில் இத்தொடர்பு பிற்காலத்தில் நிகழ்ந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இசுலாம் தமிழகத்தில் ஒரு சமயம் என்ற அளவில் புகுந்தது. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் இசுலாம் தொடக்கத்தில் பரவியது. கிறித்துவ சமயம் தொடக்கத்தில் வணிகத் தொடர்பால் தமிழகம் வந்ததேயாகும். பிறகு சமயம் பரப்புதல் என்ற நோக்கத்தில் கிறித்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர். இத்தாலி, பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்த கிறித்துவ அறிஞர்கள் கிறித்துவ சமயத்தைப் பரப்பினர். கிறித்துவமும் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களிலேயே முதலில் பரவியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-10-2017 15:06:36(இந்திய நேரம்)