தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாடமுன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    ஒரு சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்குக் கலையும், இலக்கியமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கலையைக் கவின்கலை, பயன்கலை என்று இரண்டு பிரிவாகக் கூறுவர். இசை போன்றவற்றைக் கவின்கலை அல்லது அழகுக்கலை என்றும், கட்டடக்கலை போன்றவைகளைப் பயன்கலை என்றும் கூறுவர். கலை மனத்திற்கு இன்பம் தரவல்லது; மகிழ்ச்சியூட்டக்கூடியது. கலை வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் உரியது அல்ல; தமிழ்நாட்டில் கலை சமயத்தோடு தொடர்புடைய தெய்வீகக் கலையாக விளங்குகிறது.

    சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவாகப் பண்பாட்டை எடுத்துக்காட்டுவது இலக்கியம். இலக்கியம் கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் பயன்படுகிறது. கலை பற்றியும் இலக்கியம் பற்றியும் இப்பாடத்தில் பார்க்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 12:05:20(இந்திய நேரம்)