Primary tabs
-
2.0 பாட முன்னுரை
ஐங்குறுநூறு ஓர் அக இலக்கியம். அகத்திணையைக் கூறும் நூல். தொல்காப்பியம் அகத்திணை ஏழு என்று கூறுகிறது. கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்பவை அந்த ஏழு திணைகளாகும். இவற்றுள் கைக்கிளை, பெருந்திணை அல்லாத ஐந்து திணைகள் ஐங்குறுநூற்றில் இடம் பெற்றுள்ளன. அகப் பொருண்மையையும் ஐங்குறுநூற்றையும் ஒப்பிட்டு நோக்குவது இப்பாடப் பகுதி.