Primary tabs
1.0 பாட முன்னுரை
ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் கருவியாக அமைவது மொழி. மேலும், ஒரு சமுதாயத்தில் பேசப்படும் மொழி, அந்தச் சமுதாயத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் புலப்படுத்துகிறது; சமுதாய மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறது.
ஒருமொழியைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் துணைபுரிவன அம்மொழியில் உள்ள இலக்கண நூல்களாகும். பழைய இலக்கியங்களைப் படிக்கவும், புதிய இலக்கியங் களைப் படைக்கவும் அவை பயன்படுகின்றன.
தமிழ்மொழியில் காணப்படும் இலக்கண வகைகளைப் பற்றியும், அவற்றுள் அணி இலக்கணத்தின் சிறப்புப் பற்றியும், தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூல் பற்றியும் இப்பாடத்தில் காணலாம்.