Primary tabs
5.0 பாட முன்னுரை
செய்யுளின் சொல்லமைப்பு வகையைச் செய்யுள்நெறி என்பர். செய்யுள் நெறியானது, வைதருப்பம், கௌடம் என இருவகைப்படும். ஒவ்வொரு நெறியும் பத்துப் பத்துக் குணப்பாங்குகளை உடையது. அவற்றுள் முதலாவதாகிய வைதருப்பநெறியின் முதல் ஐந்து குணப்பாங்குகளைச் சென்ற பாடத்தில் (பாடம்-4) அறிந்து கொண்டோம். வைதருப்ப நெறியின் அடுத்த ஐந்து குணப்பாங்குகள் குறித்து இந்தப் பாடத்தில் அறிந்து கொள்வோம்.