Primary tabs
-
2.3 அகத்திணையியலும் அன்பின் ஐந்திணைகளும்
அகத்திணை அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை எனப்படும் என்பதை முன்பே அறிந்தோம். அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் காணலாம்.
முதற்பொருள்நிலம்-மலையும் மலையைச் சார்ந்த இடமும்பொழுது-
அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும்ஆ) சிறு பொழுது - யாமம்
கருப்பொருள்கள்
1.தெய்வம்-சேயோன்
2.உணவு-ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி,
கிழங்கு3.விலங்கு-புலி, யானை, கரடி, பன்றி
4.மரம்-அகில், ஆரம், தேக்கு, வேங்கை
5.பறவை-கிளி, மயில்
6.பறை-முருகியம், தொண்டகப் பறை
7.தொழில்-தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை
விதைத்தல், வேட்டையாடுதல்8.யாழ்-குறிஞ்சி யாழ்
9.பண்-குறிஞ்சிப் பண்
10.ஊர்-சிறுகுடி, குறிச்சி
11.நீர்-அருவி நீர், சுனை நீர்
12.மலர்-காந்தள், வேங்கை, குறிஞ்சி
உரிப்பொருள்
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)
முதற்பொருள்
நிலம்-காடும் காட்டைச் சார்ந்த இடமும்
பொழுது-அ) பெரும்பொழுது : கார்காலம்
ஆ) சிறுபொழுது: மாலை
கருப்பொருள்கள்1.தெய்வம்-மாயோன்
2.உணவு-வரகு, சாமை
3.விலங்கு-மான், முயல்
4.மரம்-தோன்றி, காயா, பிடவம், குருந்தம்
5.பறவை-காட்டுக்கோழி, சேவல்
6.பறை-ஏறுகோட் பறை
7.தொழில்-ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்
8.யாழ்-முல்லை யாழ்
9.பண்-குறிஞ்சிப் பண்
10.ஊர்-பாடி, சேரி
11.நீர்-குறுஞ்சுனை, கான்யாறு
12.மலர்-முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்
உரிப்பொருள்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
முதற்பொருள்நிலம்-வயலும் வயல்சார்ந்த இடமும்
பொழுது-அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்
கருப்பொருள்கள்1.தெய்வம்-இந்திரன் (வேந்தன்)
2.உணவு-செந்நெல், கரும்பு
3.விலங்கு-எருமை, நீர்நாய்
4.மரம்-வஞ்சி, காஞ்சி, மருதம்
5.பறவை-தாரா, நீர்க்கோழி
6.பறை-மணமுழவு, நெல்லரி கிணை
7.தொழில்-விதைத்தல், விளைத்தல்
8.யாழ்-மருத யாழ்
9.பண்-மருதப் பண்
10.ஊர்-ஊர்கள்
11.நீர்-ஆற்றுநீர், பொய்கை நீர்
12.மலர்-தாமரை, கழுநீர்
உரிப்பொருள்ஊடலும் ஊடல் நிமித்தமும்.
முதற்பொருள்நிலம-கடலும் கடல் சார்ந்த இடமும்
பொழுது-அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - எற்பாடு
கருப்பொருள்கள்1.தெய்வம்-வருணன்
2.உணவு-மீன், உப்பு
3.விலங்கு-உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும்
எருது), சுறா4.மரம்-புன்னை, ஞாழல், கண்டல்
5.பறவை-அன்றில், அன்னம்
6.பறை-மீன்கோட் பறை
7.தொழில்-மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு
விளைவித்தல், நாவாய் ஓட்டல்8.யாழ்-நெய்தல் யாழ்
9.பண்-நெய்தல் பண்
10.ஊர்-பட்டினம், பாக்கம்
11.நீர்-உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு
12.மலர்-நெய்தல், கைதை (தாழை)
உரிப்பொருள்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
முதற்பொருள்நிலம்-பாலை நிலம்பொழுது-அ) பெரும்பொழுது - வேனிற் காலம்,
பின்பனிக் காலம்ஆ) சிறுபொழுது - நண்பகல்
கருப்பொருள்கள்1.தெய்வம்-கொற்றவை
2.உணவு-வழிப்போக்கரிடம் திருடிய உணவு
3.விலங்கு-யானை, புலி, செந்நாய்
4.மரம்-இருப்பை, உழிஞை
5.பறவை-கழுகு, பருந்து, புறா
6.பறை-சூறை கோட் பறை
7.தொழில்-வழிப்பறி, சூறையாடல்
8.யாழ்-பாலை யாழ்
9.பண்-பாலைப் பண்
10.ஊர்-பறந்தலை
11.நீர்-கூவல் (கிணறு, குழி)
12.மலர்-மரா, குரா
உரிப்பொருள்பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில் இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு. அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.