Primary tabs
-
பாடம் - 4
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் தமிழில் உரைநடை இலக்கியம், தோற்றம் பெற்றதைக் குறிப்பிடுகிறது. கவிதையிலிருந்து தோன்றி அதைச் சார்ந்து உரைநடை வளர்ந்த விதம் எடுத்துரைக்கப்படுகிறது. இலக்கண, இலக்கியங்கள் வழி உரைநடை மேன்மை பெற்றதும், உரையாசிரியர்கள் அதைப் பயன்படுத்திய விதமும் காட்டப்படுகிறது.
இறுதியாக இன்றைய இருபதாம்
நூற்றாண்டு
உரைநடையில் ஏற்பட்ட
மாற்றங்கள், பேச்சு, எழுத்து
உரைநடைகளின் விளக்கங்கள் பற்றியும் கூறப்படுகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்?
தமிழில் ‘உரைநடை
இலக்கியம்’ தோற்றம் பெற்றதை
அறியலாம்.
உரையாசிரியர்கள், உரை
விளக்கங்களைத் தெரிந்து
கொள்ளலாம்.
இன்றைய எளிமையான உரைநடை,
எவ்வாறெல்லாம்
மாற்றம் பெற்று வந்தது என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.