1. |
▪ இளையோன் |
- இளையவன் (இங்கு இலக்குவனைக் குறிக்கும்) |
|
▪ இறைஞ்சினான் |
- (குகன்) வணங்கினான். |
|
▪ கழல் |
- பாதம் (திருவடி) |
|
▪ குறுகி |
- (இலக்குவன் குகனைச்) சென்றடைந்து |
|
▪ சேவிக்க வந்தனன் |
- வணங்க வந்தேன். |
|
▪ நாய் அடியேன் |
- நாய் போன்ற கீழான அடியவன் (அன்பினால் தம்மைத் தாழ்த்திக் கொண்டு பணியும் மரபு) |
|
▪ நாவாய் வேட்டுவன் |
- படகுகளை உடைய வேடன் |
|
▪ வினவ |
- கேட்க |
|
▪ கூவா முன்னம் |
- குகன் அழைப்பதற்கு முன்னமே |
|
▪ கூவு |
- கூப்பிடு (call) , அழை |
|
▪ வருதல் |
- வாழ்தல் |
2. |
▪ இறை |
- அரசன் (சான்றோன்) |
|
▪ எற்றுநீர்க் கங்கை |
- அலைகள் வந்து எற்று(மோது)கின்ற கங்கை |
|
▪ கொற்றவ |
- மன்னவ(ர்) |
|
▪ நிற்றி ஈண்டு |
- இங்கு நில் |
|
▪ நின்னை |
- உன்னை |
|
▪ நெடியவன் தொழுது |
- நெடியவனாகிய இராமனைத் தொழுது நிறை, முழுமை |
|
▪ புக்கு |
- புகுந்து |
|
▪ தம்பி |
- இராமனது தம்பி (இலக்குவன்) |
3. |
▪ நின்னைக் காணக் குறுகினன் |
- உன்னைக் காண்பதற்காக விரைந்து வந்துள்ளான் |
|
▪ அண்ணல் |
- இராமன் |
|
▪ கண்ண(ன்) |
- இராமன் (கண் அழகுடையவன்) |
|
▪ பண்ணவன் |
- பண்பில் சிறந்தவன் (இலக்குவன்) |
|
▪ பரிவினன் |
- அன்பு உடையவன் (குகன்) |
|
▪ மண்உறப் பணிந்து |
- மண்ணில் (பூமியில் விழுமாறு) விழுந்து வணங்கி |
|
▪ என்பால் அழைத்தி |
- என்னிடம் அழைத்து வருக |
|
▪ மேனி வளைத்து |
- உடலை வளைத்து |
|
▪ வாய் புதைத்து நின்றான் |
- தனது வலது கையால் வாயினைப் பொத்திப் பணிவாக நின்றான். |
4. |
▪ ஈண்டு இருத்தி |
- இங்கே அமர்க (உட்காரவும்) |
|
▪ என்னலோடும் |
- என்று (இராமன்) கூறியபோதும் |
|
▪ எல்லை நீத்த அருத்தியன் |
- அளவு கடந்த அன்பு உடையவன் (குகன்) |
|
▪ அமுதினுக்கு |
- உணவினுக்கு |
|
▪ உன்கொல் திருவுளம்? |
- த(உ)ங்கள் விருப்பம் எப்படியோ? (அப்படியே) |
|
▪ வீரன் |
- இந்த இடத்தில் இராமனைக் குறிக்கும். |
|
▪ விருத்தமாதவர் |
- (வயது) முதிர்ந்த (மூத்த) பெருந்தவம் உடையவர்கள் (முனிவர்கள்) |
|
▪ முறுவலன் |
- புன்னகை புரிந்தவனாக |
5. |
▪ விளம்பல் உற்றான் |
- சொல்லத் தொடங்கினான். |
|
▪ அரிய |
- அருமையான (பொருட்கள்) (குகன் கொண்டு வந்த தேனும், மீனும்) |
|
▪ தாம் உவப்ப |
- தாம் மகிழ்வதற்கானவை |
|
▪ உள்ளத்து அன்பினால் |
- மனத்தில் இருக்கின்ற அன்பினால் |
|
▪ காதல் தெரிதரக் கொணர்ந்த |
- (உள்ள) அன்பு வெளியில் தெரிவது போலக் கொண்டுவந்த இவை. |
|
▪ அமிழ்தினும் சீர்த்த அன்றே? |
- அமுதைவிடச் சிறந்ததாகும், அல்லவா? |
|
▪ பரிவினில் |
- அன்பினில் |
|
▪ தழீஇய என்னில் |
- கொண்டுவரப்பட்டது என்றால் |
|
▪ பவித்திரம் |
- புனிதம் (தூய்மையானவை) |
|
▪ எம்மனோர்க்கும் |
- என்போன்ற (தவம் புரிபவர்களுக்கும்) |
|
▪ இனிதின் நாமும் உண்டெனம் |
- இனிமையாக நாமும் உண்டது போலாகும் (இராமன் தவவேடம் பூண்டு கானகம் வந்திருப்பதால், அவனும் தவம் புரிபவன் ஆகிறான். ஆதலால் மீன் முதலான உணவுகளை உண்ணக் கூடாது. அதனால், குகன் கொண்டு வந்ததை உண்டதுபோல ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறுகின்றான்) |