3. காப்பிய இலக்கியம்

காப்பிய இலக்கியம்

சொல்-பொருள்
Words-Meaning


1. ▪ இளையோன் - இளையவன் (இங்கு இலக்குவனைக் குறிக்கும்)
▪ இறைஞ்சினான் - (குகன்) வணங்கினான்.
▪ கழல் - பாதம் (திருவடி)
▪ குறுகி - (இலக்குவன் குகனைச்) சென்றடைந்து
▪ சேவிக்க வந்தனன் - வணங்க வந்தேன்.
▪ நாய் அடியேன் - நாய் போன்ற கீழான அடியவன் (அன்பினால் தம்மைத் தாழ்த்திக் கொண்டு பணியும் மரபு)
▪ நாவாய் வேட்டுவன் - படகுகளை உடைய வேடன்
▪ வினவ - கேட்க
▪ கூவா முன்னம் - குகன் அழைப்பதற்கு முன்னமே
▪ கூவு - கூப்பிடு (call) , அழை
▪ வருதல் - வாழ்தல்
2. ▪ இறை - அரசன் (சான்றோன்)
▪ எற்றுநீர்க் கங்கை - அலைகள் வந்து எற்று(மோது)கின்ற கங்கை
▪ கொற்றவ - மன்னவ(ர்)
▪ நிற்றி ஈண்டு - இங்கு நில்
▪ நின்னை - உன்னை
▪ நெடியவன் தொழுது - நெடியவனாகிய இராமனைத் தொழுது நிறை, முழுமை
▪ புக்கு - புகுந்து
▪ தம்பி - இராமனது தம்பி (இலக்குவன்)
3. ▪ நின்னைக் காணக் குறுகினன் - உன்னைக் காண்பதற்காக விரைந்து வந்துள்ளான்
▪ அண்ணல் - இராமன்
▪ கண்ண(ன்) - இராமன் (கண் அழகுடையவன்)
▪ பண்ணவன் - பண்பில் சிறந்தவன் (இலக்குவன்)
▪ பரிவினன் - அன்பு உடையவன் (குகன்)
▪ மண்உறப் பணிந்து - மண்ணில் (பூமியில் விழுமாறு) விழுந்து வணங்கி
▪ என்பால் அழைத்தி - என்னிடம் அழைத்து வருக
▪ மேனி வளைத்து - உடலை வளைத்து
▪ வாய் புதைத்து நின்றான் - தனது வலது கையால் வாயினைப் பொத்திப் பணிவாக நின்றான்.
4. ▪ ஈண்டு இருத்தி - இங்கே அமர்க (உட்காரவும்)
▪ என்னலோடும் - என்று (இராமன்) கூறியபோதும்
▪ எல்லை நீத்த அருத்தியன் - அளவு கடந்த அன்பு உடையவன் (குகன்)
▪ அமுதினுக்கு - உணவினுக்கு
▪ உன்கொல் திருவுளம்? - த(உ)ங்கள் விருப்பம் எப்படியோ? (அப்படியே)
▪ வீரன் - இந்த இடத்தில் இராமனைக் குறிக்கும்.
▪ விருத்தமாதவர் - (வயது) முதிர்ந்த (மூத்த) பெருந்தவம் உடையவர்கள் (முனிவர்கள்)
▪ முறுவலன் - புன்னகை புரிந்தவனாக
5. ▪ விளம்பல் உற்றான் - சொல்லத் தொடங்கினான்.
▪ அரிய - அருமையான (பொருட்கள்) (குகன் கொண்டு வந்த தேனும், மீனும்)
▪ தாம் உவப்ப - தாம் மகிழ்வதற்கானவை
▪ உள்ளத்து அன்பினால் - மனத்தில் இருக்கின்ற அன்பினால்
▪ காதல் தெரிதரக் கொணர்ந்த - (உள்ள) அன்பு வெளியில் தெரிவது போலக் கொண்டுவந்த இவை.
▪ அமிழ்தினும் சீர்த்த அன்றே? - அமுதைவிடச் சிறந்ததாகும், அல்லவா?
▪ பரிவினில் - அன்பினில்
▪ தழீஇய என்னில் - கொண்டுவரப்பட்டது என்றால்
▪ பவித்திரம் - புனிதம் (தூய்மையானவை)
▪ எம்மனோர்க்கும் - என்போன்ற (தவம் புரிபவர்களுக்கும்)
▪ இனிதின் நாமும் உண்டெனம் - இனிமையாக நாமும் உண்டது போலாகும் (இராமன் தவவேடம் பூண்டு கானகம் வந்திருப்பதால், அவனும் தவம் புரிபவன் ஆகிறான். ஆதலால் மீன் முதலான உணவுகளை உண்ணக் கூடாது. அதனால், குகன் கொண்டு வந்ததை உண்டதுபோல ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறுகின்றான்)