காப்பிய இலக்கியம்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. கம்பர் பிறந்த ஊர் -------------- ஆகும்.
கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூர் ஆகும்.
2. நாவாய்க்கு இறை ----------- ஆவான்.
நாவாய்க்கு இறை குகன் ஆவான்.
3. கம்பராமாயணம் ------------ காண்டங்களை உடையது.
கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது.
4. எல்லை கடந்த அன்புடையவன் -------------- ஆவான்.
எல்லை கடந்த அன்புடையவன் குகன் ஆவான்.
5. கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப் பெறுபவர்கள் ----------, -------- . ஆவர்.
கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப் பெறுபவர்கள் கம்பர், ஒட்டக்கூத்தர் ஆவர்.
6. கம்பராமாயணத்தின் ஏழாம் காண்டத்தை இயற்றியவர் ------------ ஆவார்.
கம்பராமாயணத்தின் ஏழாம் காண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார்.
7. இராமனுக்குத் ---------, ----------- குகன் உணவாகக் கொடுத்தான்.
இராமனுக்குத் தேனையும், மீனையும் குகன் உணவாகக் கொடுத்தான்.
8. இராமனுடைய சிற்றன்னையின் பெயர் ---------.
இராமனுடைய சிற்றன்னையின் பெயர் கைகேயி.
9. கம்பராமாயணத்தில் தாயைவிட நல்லவன் -----------.
கம்பராமாயணத்தில் தாயைவிட நல்லவன் குகன்.
10. நட்பினால் உண்டான உறவை ---------- அழகாக நமக்கு விளக்கிக் காட்டுகிறது.
நட்பினால் உண்டான உறவை கம்பராமாயணம் அழகாக நமக்கு விளக்கிக் காட்டுகிறது.