Primary tabs
- 
தன்மதிப்பீடு : விடைகள் - 1 9. தமது தந்தையார் இறந்த அவலத்தைப் பாரதியார் எங்ஙனம் குறிப்பிட்டுள்ளார்? தந்தை இறந்த பின்னர் தாம் ஓர் அகதி போல் ஆனதை பாரதியார் பின்வருமாறு பாடியுள்ளார்: தந்தை போயினன், பாழ்மிடி சூழ்ந்தது; 
 தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;
 சிந்தையில் தெளிவு இல்லை; உடலினில்
 திறனும் இல்லை; உரன்உளத்து இல்லையால்.
 எந்த மார்க்கமும் தோற்றிலது என்செய்கேன்?
 ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?
 
 
						 
						