Primary tabs
-
3.0 பாட முன்னுரை
ஒளவையார் எழுதிய அறநூல்களில் மூதுரையும் நல்வழியும் அடங்கும். ஓர் அடியின் வாயிலாக ஆத்திசூடியிலும் கொன்றைவேந்தனிலும் அறக்கருத்துகளை உணர்த்திய ஒளவையார், இவற்றில் நான்கு அடியால் ஆன பாடல்களின் மூலம் அறக்கருத்துகளை உணர்த்துகிறார்.