Primary tabs
-
4.0 பாட முன்னுரை
பிற்காலத்தில் தோன்றிய அறநூல்களில் ஒன்று வெற்றிவேற்கை. இதை இயற்றியவர் அதிவீரராம பாண்டியன். இவர் பாண்டிய நாட்டின் தென்பகுதியை ஆண்ட மன்னர். மன்னராய் இருந்த இவர், தமிழில் புலமை பெற்று விளங்கியதால், தமிழ்ப் புலவர்களுக்கு ஆதரவு அளித்தார். புலவர்கள் இயற்றிய படைப்புகள் குற்றம் உடையதாக இருந்தால் இவர் தண்டித்தார்; சிறப்பாக இருந்தால் பரிசுகள் வழங்கினார்.
இவர், நைடதம், காசிக்காண்டம், திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய வேறு நூல்களையும் இயற்றியுள்ளார்.