Primary tabs
-
5.0 பாட முன்னுரை
தமிழில் தோன்றிய பிற்கால அறநூல்களில் நீதிநெறி விளக்கமும் ஒன்று. இந்நூல் 102 வெண்பாக்களைக் கொண்டது. மதுரையை ஆண்ட திருமலை மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்நூலைக் குமரகுருபரர் இயற்றினார். இந்நூலிலுள்ள கருத்துகள் திருக்குறள் கருத்துகளை அடியொற்றியவை.