Primary tabs
6.2 வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
ஒரு மெய் எழுத்தை அடுத்து வேறு ஒரு மெய்எழுத்துச் சேர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.
ஒரு சொல்லின் முதல் எழுத்தாக உயிர் மெய் எழுத்து இருந்தால் அதனை மெய்+உயிர் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை முந்தைய பாடத்தில் பார்த்தோம். எனவே ஒரு சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து ஓர் உயிர்மெய் எழுத்து வரும்போது இரண்டு மெய் எழுத்துகள் அடுத்தடுத்து வருகின்றன. அப்படி வரும்போது அவை இயல்பாக அமைகின்றனவா என்று பார்க்க வேண்டும். இயல்பாக இருந்தால் அது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.
எடுத்துக்காட்டாக, நான்கு என்னும் சொல்லில் ன் என்னும் மெய்எழுத்தும் க் என்னும் மெய் எழுத்தும் இயல்பாக இணைந்து ஒலிக்கின்றன. எனவே இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று அழைக்கப்படுகிறது.
மெய்எழுத்துகள் பதினெட்டில் க, ச, த, ப என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர்த்து, ஏனைய பதினான்கு மெய்எழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய் எழுத்துகள்ங், ஞ், ட், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்என்பன ஆகும்.
• ங் என்னும் மெய்எழுத்து
‘ங்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின், ‘க்’ என்னும் மெய்எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை.
எடுத்துக்காட்டு:
தங்கம்
வங்காளம்
அங்கி (நெருப்பு, சட்டை)
அங்கு
அங்கூடம் (அழகிய கூடம்)
அங்கே
அங்கை (உள்ளங்கை)
எங்கோமான்• ஞ் என்னும் மெய் எழுத்து
‘ஞ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச், ய் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கஞ்சம் (தாமரை)
அஞ்சாமை
அஞ்சி
அஞ்சீறடி (அழகிய சிறிய பாதம்)
கஞ்சுகம் (சட்டை)
உரிஞ்(தேய்) யாது• ட் என்னும் மெய் எழுத்து
‘ட்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்
எடுத்துக்காட்டு:
வெட்கம்
வெட்சி (ஒரு பூ)
மாட்சி (பெருமை)
நட்பு
நுட்பம்• ண் என்னும் மெய் எழுத்து
‘ண்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ட், ப், ம், ய், வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும்.
எடுத்துக்காட்டு:
வெண்கலம்
கண்காட்சி}க்வெண்சோறு
மண்சேறு}ச்வெண்ஞமலி
உண்ஞமலி (உண்கின்ற நாய்)}ஞ்மண்டலம்
வண்டல்}ட்நண்பகல்
நண்பன்}ப்வெண்மலர்
உண்மை}ம்மண்யாது-ய்மண்வலிது-வ்• ந் என்னும் மெய் எழுத்து
‘ந்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் த், ய் என்னும் மெய்எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
வந்த
வந்தான்}த்வெரிந்யாது-ய்• ம் என்னும் மெய்எழுத்து
‘ம்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கம்பன்
அம்பு}ப்கலம்யாது
புலம்யாது}ய்கலம்வலிது
வலம்வரும்}வ்• ய் என்னும் மெய் எழுத்து
‘ய்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
பொய்கை (நீர்நிலை)
மொய்குழல்(அடர்ந்த கூந்தல்)}க்வேய்சிறிது
காய்சினம்}ச்வேய்ஞான்ற
(மூங்கில் முதிர்ந்தது)-ஞ்நெய்தல்
நொய்து (மெல்லியது)}த்மெய்நீண்டது-ந்மெய்பெரிது-ப்பேய்மனம்-ம்பேய்வலிது-வ்• ர் என்னும் மெய் எழுத்து
‘ர்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
வேர்கள்- க்வேர்சிறியது- ச்வேர்ஞான்றது- ஞ்தேர்தல்- த்நீர்நிலம்- ந்மார்பு- ப்கூர்மை- ம்வியர்வை- வ்• ல் என்னும் மெய் எழுத்து
‘ல்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் என்னும் மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கால்கோள் (தொடக்கம்)- க்வல்சி (உணவு)- ச்கல்பாக்கம்- ப்நல்யாறு- ய்பல்வலி- வ்• வ் என்னும் மெய் எழுத்து
‘வ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும்.
எடுத்துக்காட்டு : தெவ்யாது (தெவ் - பகை)
• ழ் என்னும் மெய் எழுத்து
‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
ழூழ்கினான்- க்பாழ்செய் (பாழ்படுத்து)- ச்வீழ்ஞான்ற (தொங்கிய விழுது)- ஞ்ஆழ்தல்- த்வாழ்நாள்- ந்வாழ்பவன்- ப்வாழ்மனை- ம்வாழ்வு- வ்• ள் என்னும் மெய் எழுத்து
‘ள்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கொள்கலம்- க்வாள்சிறிது- ச்வாள் பெரிது- ப்வாள்யாது- ய்கள்வன்- வ்• ற் என்னும் மெய்எழுத்து
‘ற்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கற்க- க்கற்சிலை- ச்கற்பவை- ப்• ன் என்னும் மெய் எழுத்து
‘ன்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ப், ம், ய், வ், ற் என்னும் மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
பொன்கலம்- க்புன்செய்- ச்புன்ஞமலி- ஞ்புன்பயிர்- ப்நன்மை- ம்பொன்யாது- ய்பொன்வலிது- வ்தென்றல்- ற்இதுவரை க், ச், த், ப் என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர, ஏனைய பதினான்கு மெய் எழுத்துகளும் பிற மெய் எழுத்துகளுடன் சேர்ந்து வரும் தன்மையைப் பார்த்தோம்.