தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-6:2-வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

  • 6.2 வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

    ஒரு மெய் எழுத்தை அடுத்து வேறு ஒரு மெய்எழுத்துச் சேர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

    ஒரு சொல்லின் முதல் எழுத்தாக உயிர் மெய் எழுத்து இருந்தால் அதனை மெய்+உயிர் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை முந்தைய பாடத்தில் பார்த்தோம். எனவே ஒரு சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து ஓர் உயிர்மெய் எழுத்து வரும்போது இரண்டு மெய் எழுத்துகள் அடுத்தடுத்து வருகின்றன. அப்படி வரும்போது அவை இயல்பாக அமைகின்றனவா என்று பார்க்க வேண்டும். இயல்பாக இருந்தால் அது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

    எடுத்துக்காட்டாக, நான்கு என்னும் சொல்லில் ன் என்னும் மெய்எழுத்தும் க் என்னும் மெய் எழுத்தும் இயல்பாக இணைந்து ஒலிக்கின்றன. எனவே இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று அழைக்கப்படுகிறது.

    மெய்எழுத்துகள் பதினெட்டில் க, ச, த, ப என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர்த்து, ஏனைய பதினான்கு மெய்எழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.

    வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய் எழுத்துகள்
    ங், ஞ், ட், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

    என்பன ஆகும்.

    • ங் என்னும் மெய்எழுத்து

    ‘ங்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின், ‘க்’ என்னும் மெய்எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை.

    எடுத்துக்காட்டு:

    ங்கம்
    ங்காளம்
    ங்கி (நெருப்பு, சட்டை)
    ங்கு
    ங்கூடம் (அழகிய கூடம்)
    ங்கே
    ங்கை (உள்ளங்கை)
    ங்கோமான்

    • ஞ் என்னும் மெய் எழுத்து

    ‘ஞ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச், ய் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    ஞ்சம் (தாமரை)
    ஞ்சாமை
    ஞ்சி
    ஞ்சீறடி (அழகிய சிறிய பாதம்)
    ஞ்சுகம் (சட்டை)
    உரிஞ்(தேய்) யாது

    • ட் என்னும் மெய் எழுத்து

    ட்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்

    எடுத்துக்காட்டு:

    வெட்கம்
    வெட்சி (ஒரு பூ)
    மாட்சி (பெருமை)
    ட்பு
    நுட்பம்

    • ண் என்னும் மெய் எழுத்து

    ண் என்னும் மெய்எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ட், ப், ம், ய், வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும்.

    எடுத்துக்காட்டு:

    வெண்கலம்
    ண்காட்சி
    }
    க்
    வெண்சோறு
    ண்சேறு
    }
    ச்
    வெண்ஞமலி
    ண்ஞமலி (உண்கின்ற நாய்)
    }
    ஞ்
    ண்டலம்
    ண்டல்
    }
    ட்
    ண்பகல்
    ண்பன்
    }
    ப்
    வெண்மலர்
    ண்மை
    }
    ம்
    ண்யாது
    -
    ய்
    ண்வலிது
    -
    வ்

    • ந் என்னும் மெய் எழுத்து

    ந் என்னும் மெய் எழுத்துக்குப் பின் த், ய் என்னும் மெய்எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    ந்த
    ந்தான்
    }
    த்
    வெரிந்யாது
    -
    ய்

    • ம் என்னும் மெய்எழுத்து

    ம் என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    ம்பன்
    ம்பு

    }
    ப்

    கலம்யாது
    புலம்யாது

    }
    ய்

    கலம்வலிது
    வலம்வரும்

    }
    வ்

    • ய் என்னும் மெய் எழுத்து

    ய் என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    பொய்கை (நீர்நிலை)
    மொய்குழல்(அடர்ந்த கூந்தல்)

    }
    க்
    வேய்சிறிது
    காய்சினம்
    }
    ச்
    வேய்ஞான்ற
    (மூங்கில் முதிர்ந்தது)
    -
    ஞ்
    நெய்தல்
    நொய்து (மெல்லியது)
    }
    த்
    மெய்நீண்டது
    -
    ந்
    மெய்பெரிது
    -
    ப்
    பேய்மனம்
    -
    ம்
    பேய்வலிது
    -
    வ்

    • ர் என்னும் மெய் எழுத்து

    ‘ர்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    வேர்கள்
    - க்
    வேர்சிறியது
    - ச்
    வேர்ஞான்றது
    - ஞ்
    தேர்தல்
    - த்
    நீர்நிலம்
    - ந்
    மார்பு
    - ப்
    கூர்மை
    - ம்
    வியர்வை
    - வ்

    • ல் என்னும் மெய் எழுத்து

    ல் என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    கால்கோள் (தொடக்கம்)
    - க்
    ல்சி (உணவு)
    - ச்
    ல்பாக்கம்
    - ப்
    ல்யாறு
    - ய்
    ல்வலி
    - வ்

    • வ் என்னும் மெய் எழுத்து

    ‘வ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும்.

    எடுத்துக்காட்டு : தெவ்யாது (தெவ் - பகை)

    • ழ் என்னும் மெய் எழுத்து

    ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    ழூழ்கினான்
    - க்
    பாழ்செய் (பாழ்படுத்து)
    - ச்
    வீழ்ஞான்ற (தொங்கிய விழுது)
    - ஞ்
    ழ்தல்
    - த்
    வாழ்நாள்
    - ந்
    வாழ்பவன்
    - ப்
    வாழ்மனை
    - ம்
    வாழ்வு
    - வ்

    • ள் என்னும் மெய் எழுத்து

    ‘ள்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    கொள்கலம்
    - க்
    வாள்சிறிது
    - ச்
    வாள் பெரிது
    - ப்
    வாள்யாது
    - ய்
    ள்வன்
    - வ்

    • ற் என்னும் மெய்எழுத்து

    ‘ற்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    ற்க
    - க்
    ற்சிலை
    - ச்
    ற்பவை
    - ப்

    • ன் என்னும் மெய் எழுத்து

    ‘ன்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ப், ம், ய், வ், ற் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

    எடுத்துக்காட்டு:

    பொன்கலம்
    - க்
    புன்செய்
    - ச்
    புன்ஞமலி
    - ஞ்
    புன்பயிர்
    - ப்
    ன்மை
    - ம்
    பொன்யாது
    - ய்
    பொன்வலிது
    - வ்
    தென்றல்
    - ற்

    இதுவரை க், ச், த், ப் என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர, ஏனைய பதினான்கு மெய் எழுத்துகளும் பிற மெய் எழுத்துகளுடன் சேர்ந்து வரும் தன்மையைப் பார்த்தோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    மெய்ம்மயக்கம் என்றால் என்ன?

    2.

    மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும்?

    3.

    வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுத் தருக.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 10:25:49(இந்திய நேரம்)