தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6:4-ஈர்ஒற்று மயக்கம்

  • 6.4 ஈர்ஒற்று மயக்கம்

    ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.

    எடுத்துக்காட்டு: புகழ்ச்சி

    இதில் ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த ‘ச்’ என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.

    ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:

    ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.

    • ‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

    நாய்க்கால்
    - க்
    வேய்ங்குழல்
    - ங்
    காய்ச்சல்
    - ச்
    மெய்ஞ்ஞானம்
    - ஞ்
    மேய்த்தல்
    - த்
    பாய்ந்தது
    - ந்
    வாய்ப்பு
    - ப்
    செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்)

    • ‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

    பார்க்கிறாள்
    - க்
    ர்ங்கோடு
    - (ஆத்திமரக்கிளை) - ங்
    உயர்ச்சி
    - ச்
    ஞ்
    - வழக்கத்தில் இல்லை.
    பார்த்தல்
    - த்
    ர்ந்து
    - ந்
    தீர்ப்பு
    - ப்
    ம்
    - வழக்கத்தில் இல்லை.

    • ‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

    வாழ்க்கை
    - க்
    பாழ்ங்கிணறு
    - ங்
    வீழ்ச்சி
    - ச்
    ஞ்
    - வழக்கத்தில் இல்லை
    வாழ்த்து
    - த்
    வாழ்ந்து
    - ந்
    தாழ்ப்பாள்
    - ப்
    ம்
    - வழக்கத்தில் இல்லை.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 10:26:42(இந்திய நேரம்)