Primary tabs
6.4 ஈர்ஒற்று மயக்கம்
ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டு: புகழ்ச்சி
இதில் ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த ‘ச்’ என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.
ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:
ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.
• ‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
நாய்க்கால்- க்வேய்ங்குழல்- ங்காய்ச்சல்- ச்மெய்ஞ்ஞானம்- ஞ்மேய்த்தல்- த்பாய்ந்தது- ந்வாய்ப்பு- ப்செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்)• ‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
பார்க்கிறாள்- க்ஆர்ங்கோடு- (ஆத்திமரக்கிளை) - ங்உயர்ச்சி- ச்ஞ்- வழக்கத்தில் இல்லை.பார்த்தல்- த்ஊர்ந்து- ந்தீர்ப்பு- ப்ம்- வழக்கத்தில் இல்லை.• ‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
வாழ்க்கை- க்பாழ்ங்கிணறு- ங்வீழ்ச்சி- ச்ஞ்- வழக்கத்தில் இல்லைவாழ்த்து- த்வாழ்ந்து- ந்தாழ்ப்பாள்- ப்ம்- வழக்கத்தில் இல்லை.