Primary tabs
-
பாடம் - 1
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?இந்தப் பாடம் பொதுநிலையில் பத்துப்பாட்டையும் சிறப்பு நிலையில் சிறுபாணாற்றுப்படையையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. பத்துப்பாட்டு நூல்களின் வகை, தொகை பற்றி இப்பாடம் விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய அறிமுகச் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
பத்துப்பாட்டைப் பாடியோர், பாடப்பட்டோர் யாவர் என்பதை அறியலாம்.
பத்துப்பாட்டு நூல்கள் மூன்று வகைப்படும் என்பது தெரிய வரும்.
ஆற்றுப்படை நூல்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.
சிறுபாணாற்றுப்படை என்பதன் பெயர்ப் பொருத்தம் உள்ளிட்ட செய்திகளை அறியலாம்.