Primary tabs
- 2.4கருப்பொருள்
ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்களில் வாழும் உயிரினங்களும் வழங்கும் பொருள்களும் ‘கருப்பொருள்’ என வழங்கப்படுகின்றன. அந்தந்த நிலங்களுக்கு ஏற்ப வேறு வேறாக விளங்கும் அக்கருப்பொருள்களை இலக்கண நூல்கள் பலவாறு வகைப்படுத்தும். நம்பியகப் பொருள் 14 வகையான கருப்பொருள்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது. அவையாவன
- ஆரணங்கு (தெய்வம்)
- உயர்ந்தோர்
- உயர்ந்தோர் அல்லோர்
- புள் (பறவை)
- விலங்கு
- ஊர்
- நீர்
- பூ
- மரம்
- உணவு
- பறை
- யாழ்
- பண்
- தொழில்
குறிஞ்சி முதலான ஐவகைத் திணைகளுக்கும் (நிலங்களுக்கும்) உரிய கருப்பொருள்களின் தொகுப்பாகக் கீழ்வரும் பட்டியல் தரப்பட்டுள்ளது.
ஐந்திணைக் கருப்பொருள்கள்எண்கருப் பொருள்கள்குறிஞ்சிபாலைமுல்லைமருதம்நெய்தல்1ஆரணங்கு (தெய்வம்)முருகன்கொற்றவைதிருமால்இந்திரன்வருணன்2உயர்ந்தோர்பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, கொடிச்சிவிடலை, மீளி, எயிற்றிகுறும்பொறை நாடன் தோன்றல், கிழத்திஊரன், மகிழ்நன், மனைவிசேர்ப்பன்3தாழ்ந்தோர்கானவர்,
குறவர் - குறத்தியர்எயினர்- எயிற்றியர்,
மறவர் - மறத்தியர்இடையர் - இடைச்சியர்,
ஆயர் - ஆய்ச்சியர்உழவர் -உழத்தியர் கடையர்- கடைசியர்நுளையர்-நுளைச்சியர் பரதர்-பரத்தியர்4புள் (பறவை)கிளி, மயில்புறா,பருந்து,கழுகுகாட்டுக்கோழிஅன்னம், நாரை, மகன்றில்கடல் காகம்5விலங்குபுலி, யானை, கரடி, சிங்கம்செந்நாய்மான், முயல்எருமை, நீர்நாய்சுறாமீன்6ஊர்சிறுகுடிகுறும்புபாடிபேரூர், மூதூர்பாக்கம், பட்டினம்7நீர்அருவி நீர், சுனை நீர்---------குறுஞ்சுனை, காட்டாறுஆறு, கிணறு, குளம்உவர்நீர்க் கேணி8பூகுறிஞ்சிப் பூ, காந்தள் பூ, வேங்கைப் பூகுரவம் பூ மரவம் பூமுல்லை, பிடவம், தோன்றிதாமரை, குவளைநெய்தல், தாழை9மரம்சந்தனம்,தேக்கு, அகில், மூங்கில்உழிஞை, பாலை, ஓமைகொன்றை, குருந்தம், காயாகாஞ்சி, வஞ்சி, மருதம்புன்னை, ஞாழல்10உணவுமலைநெல், தினை, மூங்கில்அரிசிவழிப்பறி, கொள்ளையிட்டுக் கவர்ந்தவைவரகு, சாமை, முதிரைநெல்லரிசிமீனும் உப்பும் விற்றுப் பெற்ற உணவுப் பொருள்11பறைதொண்டகப் பறைதுடிஏறுகோட்பறைநெல்லரி, கிணை, மண முழவுமீன்கோட் -பறை,நாவாய்ப் பம்பை12யாழ்குறிஞ்சி யாழ்பாலை யாழ்முல்லை யாழ்மருத யாழ்விளரி யாழ்13பண்குறிஞ்சிப் பண்பஞ்சுரம்சாதாரிமருதப் பண்செவ்வழிப் பண்14தொழில்வெறியாடல், தினையும் மலை நெல்லும் விதைத்தல், தேன் அழித்தல், கிழங்கு எடுத்தல், அருவி நீர் ஆடல்போர், பகற்சூறை ஆடல்சாமை, வரகு விதைத்தல் களை கட்டல்,கடா விடல்,குழலூதுதல் குரவை ஆடுதல், கொல்லேறு தழுவுதல்வயல் களை-கட்டல்; அரிதல், கடா விடல், விழாச்செய்தல்,புதுநீர் ஆடுதல்மீன் பிடித்தல், உப்பு உண்டாக்கல், மீன் உணக்கல் கடல் ஆடுதல்.