தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-6.0 பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    மகாகவி பாரதியாரைப் போலவே, திரு.வி.கல்யாண சுந்தரனாரும் தமிழோடு பல நிலைகளில் உறவு கொண்டு எழுதி, கட்டுரை நூல்களை வழங்கினார். சில கவிதை நூல்களை வெளியிட்டார். இதழியலில் சொற்சிலம்பங்கள் பல நிகழ்த்தினார். எனினும் அவரை நினைக்கும் போது நம் கண்முன் வந்து நிற்பது அவருடைய உரைநடைப் பணிகளே. இலக்கிய விமரிசனம், தொழிலாளர் இயக்கம், தேசப்பற்று, உரிமை வேட்கை, பழந்தமிழ் மரபின் உண்மை விளக்கம், நல்வாழ்வுத் தடம், பெண்மை உயர்வு, இதழியல் போன்ற பல சமுதாய வீதிகளுக்கு, தமிழ் உரைநடை வண்டியை இழுத்து வந்து செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:40:15(இந்திய நேரம்)