Primary tabs
தன் மதிப்பீடு - I : விடைகள்
4.திரு.வி.க. தம் தமிழ்நடை பற்றிக் கூறியது என்ன?
“செவ்விய தமிழ்நடை, தமிழ்நாட்டிலுள்ள பல்லோர்க்கு இது போழ்து பயன்படாதென்று கருதித் தேசபக்தனுக்கெனச் சிறப்பாக ஒருவகை உரைநடையைக் கொண்டுள்ளேன். இதுகாலைத் தமிழ்நாட்டு வழக்கிலுள்ள பிற மொழிக் குறியீடுகளையும் இக்கால வழக்குச் சொற்களையும் ஆன்றோராட்சி பெறாத சில முறைகளையும் பண்டைத் தமிழ் மக்கள் கோலிய வரம்பிற்குப் பெரிதும் முரணாதவாறு ஆண்டு வருகின்றேன்”