Primary tabs
4.5 தொகுப்புரை
நாடகத் தமிழுக்குப் புத்துயிர் தந்தவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. இவரது முதல் நாடகமே கவிதை நாடகம். அதுவும் நடிப்பதற்கு உரிய நாடகம்; மீண்டும் மீண்டும் படித்து இன்புறுவதற்கு உரிய நாடகம்; அரங்க அமைவுக்கு இடம் தரும் அழகிய காட்சிப் பின்புலங்கள், மொழியின் செவ்வியல்பு நிலையை உறுதி செய்வதற்கு ஏற்ற நாடக உரையாடல்கள் கொண்ட நாடகம் எனப் பல நிலையிலும் தமிழன்னையின் மணிமகுடமாய் மனோன்மணீயம் திகழ்கிறது என்பதை இப்பாடத்தில் இடம்பெற்ற செய்திகளின் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
3)பல குணங்களைக் காட்டும் பாத்திரங்களைப் படைப்பதில் சுந்தரம் பிள்ளை வல்லவர் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தருக.