Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4.இடைச்சங்கம் பற்றி விளக்குக.இடைச்சங்கம் கபாடபுரத்தில் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில் வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப்பெற்று முடத்திருமாறன் என்பவன் காலத்தில் முடிவுற்றது. 59 மன்னர்களால் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர் போன்ற 3700 புலவர்கள் இருந்தனர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் போன்றவை.