தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.0- பாட முன்னுரை

  • 4.0. பாட முன்னுரை


    இறைவனைப் போற்றிப் பாடும் பாடல்களும் இறையியல் தத்துவங்களும் தமிழில் அதிக அளவில் வெளியாகியுள்ளன. எனவே தான் தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்று சிறப்பித்துச் சொல்லுவது வழக்கிலுள்ளது. வீரமும் காதலும் முதன்மைப்படுத்தப்பட்ட சங்க காலத்தில் இயற்கை வழிபாட்டுடன் இந்திரன், முருகன், திருமால், சிவன் போன்ற தெய்வங்களையும் மக்கள் வணங்கினர். பின்னர் சமண, பௌத்த சமயக் கருத்துகளுடன் வைதிக சமயக் கருத்துகளும் தமிழரிடையே பரவலாயின. சமயத் தத்துவம் தனியாக வளர்ச்சி அடைந்தது. தொடக்கக் காலத்தில் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் வெளியான சமய நூல்கள் தமிழில் தழுவி எழுதப்பட்டன. இப்போக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் தமிழரிடையே செல்வாக்குப் பெற்றிருந்தது. இத்தகைய சமய மொழிபெயர்ப்புகள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்தப் பாடப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:02:38(இந்திய நேரம்)