தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கட


VI 

வீரமா முனிவர் சரித்திரச் சுருக்கம்

 

ஆகையால் அவரைச் சிறைப்படுத்துவதினால் திருப்தி யடையாமல் அவரைக் கொலை புரியவு மெத்தனித்தார்கள். அப்போது கயித்தார் என்னுங் கிராமத்துக் கிறிஸ்தவர்கள் செய்த முயற்சியினால் அவர் சிறைச்சாலை யினின்றும் விடுதலையாகி, மரணத்திற்குத் தப்பிப்பிழைத்தார். இவ்வாறானதால் அந்தப் பிராமணர்கள் கொண்ட எண்ணம் நிறைவேறாமற் போயிற்று. இதன்உண்மை அவ்வூரின் சுற்றுப்புறத்துள்ள கிறிஸ்தவக்கிராமவாசிகளின் கன்னபரம்பரையாலும், 1715ம்-u சனவரி-t 12-s பெஸ்கி யென்பவர் தாமே யெழுதியிருக்கிற நிருபத்தாலும் விளங்கும். பின்பு அவர் 1716-ம் வருஷத்தில் மதுரைக்குச் சென்றார். ஆனால் அவர் அங்கே செய்ததின்ன தென்று தெரியவில்லை; பிறகு 1720-ம் வருஷத்தில் திருச்சிராப்பள்ளிக்கடுத்த வடுகர்ப்பட்டியில் வந்து நிலைத்திருந்தார். இவ்வாறு நடக்குங் காலத்திலும் அவர் தமிழைக் கற்றுத் தேர்ந்து அதைக் கரைகண்டா ரென்பதற்கு 1726-ம் ஆண்டில் அவரியற்றிய தேம்பாவணி முதலான சிறந்தநூல்களே சாட்சி பகரும். இவர் காலத்துக்குப் பிறகு இந்நாட்டுத் தமிழ்ப்புலவர் அநேகர் பலநூல்களைச் செய்தாரேனும், அவைகளி லொன்றேனும் இத்தேம்பாவணிக்கு நிகராமோ?

இதன்றி 1727-ம் ஆண்டில் ‘‘வேதியழுரொக்கம்’’ என்னும் நூலை உபதேச ரத்நாகரம் எனத்திருப் பணியாளருக்குபயோகமாக வியற்றினார். இதனைப்படிப் போருக்கிதன்னடையினால் மனமகிழ்ச்சியும், பொருளினால் பக்தி. ஞானம் முதலியவற்றின் அபிவிர்த்தியும் உண்டாகும். இயற்றமிழ் நடைக்கிது சிறந்தமுன் மாதிரியாக விருக்கிறதுமன்றி கடுஞ்சொற்பொழிவு, பொருட்பேதம், பிழைபாடு, அன்னியபாஷை நடைக்கலப்பு. முதலியவற்றால் நிரம்பியதும் காதுக்கினிமை யற்றதுமாயிருக்கின்ற தற்கால வியற்றமிழ்நூல்களின் குறைகுற்றங்களை வெளியாக்கும் சுலோசன மெனவுந்தகும்.

1729-ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளிக் கடுத்த ஆவூரி லிருந்தபோது இவர் தாமியற்றிய தேம்பாவணிக் குரை எழுதினார். இக்கிராமத்திலேயே வெகுநாள் வசித்துத் தமது வாழ்நாளெல்லாந் தமிழை ஆராய்ந்தார். கிறிஸ்துமார்க்கம் இந்நாட்டிற் பரவுதற்கு இவர் இடைவிடாது முயன்று வந்தாரென்று கன்னபரம்பரையால் விளங்குகிறது. அவர் ஊருக் கூர்ப் பயணம் பண்ணி ஜனங்களுக்குப் போதித்துத் தம்மோடு வாதாடவந்தவர்களையெல்லாம் வென்று விசேஷமாக உயர்ந்த ஜாதியோரையே கிறிஸ்தவர்களாக்கிவந்தார். கிறிஸ்தவ ஆலயங்கட்டிவைப்பதும் அவற்றை வினோதமாக அலங்கரிப்பதும் அவருக்கதிகப் பிரியம். 50 வருஷத்திற்கு முன்னிருந்த முத்துசாமிப்பிள்ளை யென்பவரெழுதிய வீரமாமுனிவர் சரித்திரத்தில் இவரைப்பற்றி யநேகமாய் காணலாம். திருஷ்டாந்தமாக:-

கல்விப் பெருக்கத்தா லகங்கரித்த வொன்பது சடைப்பண்டாரங்கள் வந்து வீரமா முனிவரோடு தர்க்கம் பண்ணி யவரை வெல்ல வேண்டு


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 17:30:38(இந்திய நேரம்)