தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட்டியல் - பிற்சேர்க்கை 3

463


        சாரும்மணி கெ-கே-கை, கொ-கோ இரண்டினுக்கும்

              சானவியுடன் காரும் ஆம்;

 

          சகரமொடு சகர ஆகாரம் மணிபால்சுதை,

              தருவேழமே சி-சீ-க்கு,

 

          சாற்றிய சு-சூமுதல் ஐந்துக்கும் உறும்பூவை,

              சாதரூபம் சீர் சொ-சோ;

 

     தெரி ஞ-ஞாவுக்கு அமுதம்ஆழி; த-தாவைத்திருத்

              திகிரியே பொருந்தும்,

 

          தி-தீஎனும் சொல்லுக்கு நீரே, து-தூ-ஐந்து

              செல்வமும், வேலைத் தொ-தோ;

 

          சீர்மதி ந-நாமுதல் ஆறும்உலகம் எய்துமே,

              சீர் நி-நீ ஆதி ஆகும்,

 

          சேருமே நு-நூச்சொல், நெ-நே-நை அமுதம்மணி

              சிந்து, நொ-நோ அமுதமாம்;

 

     பரவு ப-முதல்நான்கும் பூதரணிதேர், பு-பூ பார்

              பொன்சொல், பெ-பே உறும்

         

          பார்தருவும்; மகரம் முதல் நான்கு பூ, மு-மூ பூ

              பாரும்; மெ-மே-மை பிறைஆம்,

 

          பகர் மொ-மோபிறை; ய-யா சீர், யு-யோ புவி;வ-வா

              பங்கசைதேர், வி-வீக்குப்

 

          பதுமை, பின்நான்கிற்கும் மதிஅணி, எனத்தேர்ந்து

              பாவலர்கள் உரைசெய்வரே.’ 

3

பிரபந்த வகைகள்

     ‘சாதகம் பிள்ளைக்கவி பரணி கோவை அர

              சன் விருத்தம் தொகைநிலை

 

          சாரும் ஐந்திணை எண்தரும் செய்யுள் அங்கமொடு

             தானை அநுராகம் நாமம்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 19:24:24(இந்திய நேரம்)