Primary tabs
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
                          
                           5. அரசன் விருத்தம் : 
                        
                             பத்துக் கலித்துறையும்
                          முப்பது விருத்தமும் கலித்தாழிசையுமாக
                          மலை
                          கடல் நாட்டு வருணனையும், நில வருணனையும்,
                          வாள்மங்கலமும்,
                          தோள்மங்கலமும் பாடி முடிப்பது. இது
                          முடிபுனைந்த வேந்தற்கு ஆம்.
                        
6. அலங்கார பஞ்சகம் :
                             வெண்பா, கலித்துறை, அகவல்,
                          ஆசிரிய விருத்தம், சந்த விருத்தம்
                           இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுள்
                          அந்தாதித்துப் பாடுவது.
                        
7.ஆற்றுப்படை :
                               அகவற்பாவால்,
                          விறலி, பாணர், கூத்தர், பொருநர்
                          இந்நால்வருள்
                          ஒருவர் பரிசிற்குப் போவாரைப் பரிசுபெற்று
                          வருவார் ஆற்றிடைக்கண்டு
                          தலைவன் கீர்த்தியும் கொடையும் கொற்றமும்
                          சொல்வது.   
                        
8. இணைமணிமாலை :
                          வெண்பாவும் அகவலும் வெண்பாவும்
                          கலித்துறையுமாக இரண்டிரண்டாக
                          இணைத்து, வெண்பா அகவல் இணைமணி மாலை,
                          வெண்பாக் கலித்துறை
                          இணைமணிமாலை என நூறு நூறு அந்தாதித்தொடை
                          நான்காலும் பாடுவது.
                        
9. இயன்மொழி வாழ்த்து :
                          இக்குடிப் பிறந்தோர்க்கு எல்லாம் இக்குணம்
                          இயல்பு என்றும், அவற்றை
                          நீயும் இயல்பாக உடையை என்றும் இன்னோர்போல
                          நீயும் இயல்பாக ஈ
                          என்றும் உயர்ந்தோர் ஒருவனை வாழ்த்துவதாகக்
                          கூறுவது.
                           
                        
 
						