தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

பாட்டியல் - பிற்சேர்க்கை 4
485

19.  ஊர் வெண்பா :

வெண்பாவால் ஊரைச் சிறப்பித்துப் பத்துச் செய்யுள் கூறுவது.

20.  ஊரின்னிசை :

பாட்டுடைத்தலைவன் ஊரினைச்சார இன்னிசை வெண்பாவால்
 தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடுவது.

21.  எண் செய்யுள் :

பாட்டுடைத்தலைவனுடைய ஊரினையும் பெயரினையும் பத்து முதல்
 ஆயிரம் அளவும் பாடி எண்ணால் பெயர் பெறுவது.

22.  எழு கூற்றிருக்கை :

ஏழு அறை ஆக்கிக் குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும்
 விளையாடும்பெற்றியால் வழுவாமையால் ஒன்று முதலாக ஏழ் இறுதியாக
 முறையானே பாடுவது.

23.  ஐந்திணைச் செய்யுள் :

புணர்தல் முதலிய ஐந்து உரிப்பொருளும் விளங்கக் குறிஞ்சி முதலிய
ஐந்திணையினையும் கூறுவது.

24.  ஒருபா ஒருபஃது :

அகவலும் வெண்பாவும் கலித்துறையும் ஆய இவற்றில் ஒன்றால்
அந்தாதித் தொடையால் பத்துப் பாடுவது. 

25.  ஒலியலந்தாதி :

பதினாறுகலை ஓரடியாக வைத்து, இங்ஙனம் நாலடிக்கு
அறுபத்துநான்கு கலைவகுத்துப் பல சந்தமாக வண்ணமும் கலை வைப்பும்
தவறாமல் அந்தாதித்து முப்பது செய்யுள் பாடுவது; சிறுபான்மை எட்டுக்
கலையானும் வரப்பெறும்.அன்றியும் அகவல் வெண்பா கலித்துறை ஆகிய
இம்மூன்றையும்பப்பத்தாக அந்தாதித்துப் பாடுவதும் ஆம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:20:17(இந்திய நேரம்)