தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பாட்டியல் - பிற்சேர்க்கை 4

491


54.  நவமணிமாலை :

வெண்பா முதலாக வேறுபட்டபாவும் பாவினமுமாக ஒன்பது செய்யுள்
 அந்தாதித்துப் பாடுவது.

55.  நாமமாலை :

அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால்
ஆண்மகனைப் புகழ்ந்து பாடுவது. 

56.  நாற்பது : 

காலமும் இடமும் பொருளும் ஆகிய இவற்றுள் ஒன்றனை நாற்பது
 வெண்பாவால் கூறுவது.  

57.  நான்மணிமாலை :  

வெண்பாவும் கலித்துறையும் விருத்தமும் அகவலும் அந்தாதித்
தொடையாக நாற்பது பாடுவது.

58.  நூற்றந்தாதி :

நூறு வெண்பாவினாலேனும் நூறு கலித்துறையினாலேனும் அந்தாதித்
 தொடையால் கூறுவது.

59.  நொச்சி மாலை :

புறத்து ஊன்றிய மாற்றாருக்கு ஓடலின்றி நொச்சிப் பூமாலை
 சூடித்தன்மதில் காக்கும்திறம் கூறுவது.

60. பதிகம் :

ஒரு பொருளைக் குறித்துப் பத்துச்  செய்யுளால் கூறுவது.

61.  பதிற்றந்தாதி :

பத்து வெண்பா பத்துக் கலித்துறை பொருட்டன்மை தோன்ற
அந்தாதித்துப் பாடுவது.



புதுப்பிக்கபட்ட நாள் : 23-05-2018 15:26:49(இந்திய நேரம்)