Primary tabs
490
இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
47. தாரகை மாலை :
அருந்ததிக் கற்பின் மகளிர்க்கு உள்ள
இயற்கைக் குணங்களை
வகுப்பால் கூறுவது. தூசிப்படையின் அணியைப்
புகழ்ந்த வகுப்பு என்பாரும்
உளர்.
48. தானை மாலை :
அகவலோசையில் பிறழாது ஆசிரியப்பாவான்
முன்னர் எடுத்துச்
செல்லும் கொடிப்படையைக் கூறுவது.
49. தும்பை மாலை :
மாற்றாரோடு தும்பைப்பூ மாலை சூடிப்
பொருவதைக் கூறுவது
50. துயிலெடை நிலை :
தன் வலியால் பாசறைக்கண் ஒரு
மனக்கவற்சியின்றித் துயின்ற
அரசற்கு நல்ல புகழினைக் கொடுத்தலைக் கருதிய
சூதர் துயிலெடுப்புதலாகப்
பாடுவது.
51. தூது :
ஆண்பாலாரும் பெண்பாலாரும் அவரவர்
காதற்பாணன் முதலிய
உயர்திணையோடும் கிள்ளை முதலிய அஃறிணையோடும்
சொல்லித்
‘தூதுபோய் வா’ எனக் கலிவெண்பாவால்
கூறுவது.
52. தொகைநிலைச் செய்யுள் :
நெடிலடிச் செய்யுளால் தொகுத்தது
நெடுந்தொகையும், குறளடிச்
செய்யுளால் தொகுத்தது குறுந்தொகையும்
கலிப்பாவால்
தொகுத்ததுகலித்தொகையும் போல்வன.
53. நயனப்பத்து :
கண்ணினைப் பத்துச் செய்யுளால் கூறுவது.