பொருநர் ஆற்றுப்படை
சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார்
பாடியது.
அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்,
சாறு கழி வழி நாள், சோறு நசை உறாது,
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்;
விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை,
எய்யா இளஞ் சூல் செய்யோள் அவ் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல,
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;
அளை வாழ் அலவன் கண் கண்டன்ன,
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி;
10
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி,
அண் நா இல்லா அமை வரு வறு வாய்;
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்;
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்;
கண்கூடு இருக்கைத் திண் பிணித் திவவின்;
15
ஆய் தினையரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணியன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமை வரு, காட்சி;
20
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்,
சீருடை நன் மொழி நீரொடு சிதறி
பாடினியின் கேசாதிபாத வருணனை
அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல்,
25
கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண்,
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்,
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
பூங் குழை ஊசற் பொறை சால் காதின்,
30
நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தின்,
ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை,
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்,
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்,
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து,
35
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை,
நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்,
உண்டு என உணரா உயவும் நடுவின்,
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்,
இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின்,
40
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்து நாய் நாவின், பெருந் தகு சீறடி,
அரக்கு உருக்கு அன்ன செந் நிலன் ஒதுங்கலின்,
பரல் பகை உழந்த நோயொடு சிவணி,
மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள்
45
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின்,
பெடை மயில் உருவின், பெருந் தகு பாடினி
காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல்
பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி,
இலை இல் மராஅத்த, எவ்வம் தாங்கி,
50
வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில்,
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை
பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல்
பீடு கெழு திருவின், பெரும் பெயர், நோன் தாள்,
முரசு முழங்கு தானை, மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல
55
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியர் தலைவ! கொண்டது அறிந!
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது,
ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே;
போற்றிக் கேண்மதி, புகழ் மேம்படுந!
60
பரிசு பெற்றோன் பாடின முறை
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு
நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று
எழுமதி; வாழி, ஏழின் கிழவ!
பழுமரம் உள்ளிய பறவையின், யானும், அவன்
இழுமென் சும்மை இடனுடை வரைப்பின்,
65
நசையுநர்த் தடையா நன் பெரு வாயில்
இசையேன் புக்கு, என் இடும்பை தீர,
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி,
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப,
கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி
70
இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப, விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்,
ஒன்று யான் பெட்டா அளவையின்
அரசன் விருந்தோம்பலின் சிறப்பு
கேளிர் போல, கேள் கொளல் வேண்டி,
வேளாண் வாயில் வேட்பக் கூறி,
75
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ,
பருகு அன்ன அருகா நோக்கமோடு,
உருகுபவை போல் என்பு, குளிர் கொளீஇ,
ஈரும் பேனும் இருந்து இறைகூடி,
வேரொடு நனைந்து, வேற்று இழை நுழைந்த
80
துன்னல் சிதாஅர் துவர நீக்கி,
நோக்கு நுழைகல்லா நுண்மைய, பூக் கனிந்து
அரவு உரி அன்ன, அறுவை நல்கி,
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து,
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர்,
85
போக்கு இல் பொலங் கலம் நிறைய, பல் கால்,
வாக்குபு தரத்தர, வருத்தம் வீட,
ஆர உண்டு, பேர் அஞர் போக்கி,
இரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்
திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி,
90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான,
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி,
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து,
95
காலையில் அரசவைக்குச் செல்லுதல்
மாலை அன்னது ஓர் புன்மையும், காலைக்
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்,
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப,
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப,
கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட,
100
கதுமெனக் கரைந்து, 'வம்' எனக் கூஉய்,
அதன் முறை கழிப்பிய பின்றை, பதன் அறிந்து,
உணவு கொடுத்து ஓம்பிய முறை
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி,
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங் குறை
105
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,
அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ,
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க,
110
மகிழ்ப் பதம் பல் நாள் கழிப்பி, ஒரு நாள்,
'அவிழ்ப் பதம் கொள்க' என்று இரப்ப, முகிழ்த் தகை
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்,
பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப
115
அயின்ற காலை, பயின்று இனிது இருந்து,
கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,
உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து,
ஊருக்குச் செல்லப் பரிசிலன் விரும்புதல்
'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய
120
செல்வ! சேறும், எம் தொல் பதிப் பெயர்ந்து' என,
அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்
அகறிரோ எம் ஆயம் விட்டு?' என,
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு,
'துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு
125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!' என,
தன் அறி அளவையின் தரத்தர, யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு,
கரிகால் வளவனது சிறப்புக்கள்
உருவப் பல் தேர் இளையோன் சிறுவன்,
130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி,
135
வெவ் வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,
ஆளி நல் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி
140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த
145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்
தொழுது முன் நிற்குவிர் ஆயின்,
150
கரிகாலனது கொடையின் சிறப்பு
ஈற்று ஆ விருப்பின், போற்றுபு நோக்கி, நும்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கி, தூய
கொட்டைக் கரைய பட்டு உடை நல்கி,
155
'பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க' என,
பூக் கமழ் தேறல் வாக்குபு தரத்தர,
வைகல் வைகல் கை கவி பருகி,
எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி,
160
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய,
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஊட்டு உளை துயல்வர, ஓரி நுடங்க,
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி,
165
காலின் ஏழ் அடிப் பின் சென்று, 'கேலின்
தாறு களைந்து, ஏறு' என்று ஏற்றி, வீறு பெறு
பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, நீர் வாய்த்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
நன் பல் ஊர நாட்டொடு, நன் பல்,
170
வெரூஉப் பறை நுவலும், பரூஉப் பெருந் தடக் கை,
வெருவரு செலவின், வெகுளி வேழம்
தரவிடைத் தங்கல் ஓவிலனே: வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி, தெற்றென,
செலவு கடைக்கூட்டுதிர்ஆயின், பல புலந்து,
175
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
'செல்க' என விடுக்குவன் அல்லன்
சோழ நாட்டின் வளமும் வனப்பும்
திரை பிறழிய இரும் பௌவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை,
மா மாவின் வயின் வயின் நெல்,
180
கூடு கெழீஇய, குடிவயினான்,
கருங் காக்கை கவர்வு முனையின்,
மனை நொச்சி நிழல் ஆங்கண்,
185
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்;
இளையோர் வண்டல் அயரவும்; முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண் சொலவும்
முடக் காஞ்சிச் செம் மருதின்,
அறைக் கரும்பின் அரி நெல்லின்
வறள் அடும்பின் இவர் பகன்றைத்
195
தளிர்ப் புன்கின் தாழ் காவின்
அவண் முனையின், அகன்று மாறி,
அவிழ் தளவின் அகன் தோன்றி,
நகு முல்லை, உகு தேறு வீ,
200
நல் புறவின் நடை முனையின்,
சுற வழங்கும் இரும் பௌவத்து
பூம் புன்னைச் சினைச் சேப்பின்,
205
தீம் பெண்ணை மடல் சேப்பவும்;
கோட் தெங்கின், குலை வாழை,
கொழுங் காந்தள், மலர் நாகத்து,
துடிக் குடிஞை, குடிப் பாக்கத்து,
210
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப,
நில மயக்கமும் நல் ஆட்சியும்
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்;
215
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்;
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும் பூங் கண்ணி குறவர் சூட;
கானவர் மருதம் பாட, அகவர்
220
நீல் நிற முல்லைப் பல் திணை நுவல;
தண் வைப்பின் நால் நாடு குழீஇ,
மண் மருங்கினான் மறு இன்றி,
பெரிது ஆண்ட பெருங் கேண்மை,
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்,
230
அன்னோன் வாழி, வென் வேல் குருசில்!
காவிரியின் வெள்ளச் சிறப்பு
மன்னர் நடுங்கத் தோன்றி, பல் மாண்
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி,
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக்
235
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்,
துறைதுறைதோறும், பொறை உயிர்த்து ஒழுகி,
நுரைத்தலைக்குரைப்புனல்வரைப்புஅகம்புகுதொறும்,
240
புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி, குயத்தின் வாய் நெல் அரிந்து,
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும்,
245
சாலி நெல்லின், சிறை கொள் வேலி,
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.
சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார்
பாடியது.
பொருநர் ஆற்றுப்படை முற்றும்.
ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு
வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின்,
அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும்
கரிகாலன் காவிரி சூழ் நாடு.
1
அரிமா சுமந்த அமளி மேலானைத்
திருமாவளவன் எனத் தேறேன்; - திரு மார்பின்
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப்
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று.
3