தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதடி வைகலார்


பதடி வைகலார்

323. முல்லை
எல்லாம் எவனோ? பதடி வைகல்-
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள்-அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே,
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:17:27(இந்திய நேரம்)