தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காலை எழுந்து கடுந்தேர்


காலை எழுந்து கடுந்தேர்

45. மருதம்
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி,
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன், 'எல்லினன் பெரிது' என,
மறுவரும் சிறுவன் தாயே;
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.
தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது.- ஆலங்குடி வங்கனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:49:19(இந்திய நேரம்)