தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெருங்கடற் கரையது...களிற்றுச்


பெருங்கடற் கரையது...களிற்றுச்

246. நெய்தல்
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி,
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு,
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே;
அலையாத் தாயரொடு நற்பாலோரே.
சிறைப்புறம். - கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:04:58(இந்திய நேரம்)