Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
சான்றிதழ்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
பழைய பாடத்திட்டம்
பாடங்கள்
சான்றிதழ்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பழைய பாடத்திட்டம்
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
பிற
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
381-390
381-390
Primary tabs
பார்
(active tab)
What links here
381-390
381
பைங் காய் நெல்லி பல உடன் மிசைந்து,
செங் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்
யார்கொல், அளியர் தாமே வார் சிறைக்
குறுங் கால் மகன்றில் அன்ன
5
உடன் புணர் கொள்கைக் காதலோரே?
உடன்போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. 1
382
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள் வேல்
திருந்து கழல் காளையொடு அருஞ் சுரம் கழிவோள்,
எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப்
புனை இழை மகளிர்ப் பயந்த
5
மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.
தலைமகள் இடைச் சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத் தங்கியவழி, அவ்வூர்ப் பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டார் சொல்லியது. 2
383
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடுங் கால் மராஅத்துக் குறுஞ் சினை பற்றி,
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே
5
பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே.
உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற் பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்க, கண்டார் கூறியது. 3
384
சேட் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்!
நும் ஒன்று இரந்தனென் மொழிவல்; எம் ஊர்,
'யாய் நயந்து எடுத்த ஆய்நலம் கவின
ஆர் இடை இறந்தனள்' என்மின்
5
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே.
உடன்போகிய தலைமகள் ஆண்டு எதிர்வரும் அந்தணர்க்குச் சொல்லியது. 4
385
'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி,
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய,
வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக்
கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்!
5
நல் தோள் நயந்து பாராட்டி,
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே.
வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5
386
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே
நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறுவி! நின் கடுஞ் சூல் மகளே.
புணர்ந்து உடன்போகிய தலைமகளை இடைச் சுரத்துக் கண்டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது. 6
387
'அறம் புரி அரு மறை நவின்ற நாவின்
திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்' என்று
ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே!
கண்டனெம் அம்ம, சுரத்திடை அவளை
5
இன் துணை இனிது பாராட்ட,
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர் அவட்குச் சொல்லியது. 7
388
நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக்
கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ,
சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப்
பொன் ஏர் மேனி மடந்தையொடு
5
வென் வேல் விடலை முன்னிய சுரனே.
தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8
389
'செய் வினைப் பொலிந்த செறி கழல் நோன் தாள்
மை அணல் காளையொடு பைய இயலி,
பாவை அன்ன என் ஆய்தொடி மடந்தை
சென்றனள்! என்றிர், ஐய!
5
ஒன்றினவோ, அவள் அம் சிலம்பு அடியே!
பின்சென்ற செவிலித்தாய், வினவப் பட்டோர் 'கண்டோம்' என்புழி, சொல்லியது. 9
390
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது
பல் ஊழ் மறுகி வினவுவோயே!
திண் தோள் வல்வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்திடை, யாமே.
பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவ, கண்டோர் தாம் கண்டவாறு அவட்குக் கூறியது. 10
உரை
HOME
Tags :
l1230139
பார்வை 110
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:55:11(இந்திய நேரம்)
Legacy Page