தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நல் வழுதியார்

நல் வழுதியார்

12. வையை


வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல்

வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,
விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி,
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
5
அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய;
தகரமும், ஞாழலும், தாரமும், தாங்கி,
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
வளி வரல் வையை வரவு.


புனல் வரவு காண மகளிர் சென்ற வகை

'வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,
10
அம் தண் புனல் வையை யாறு' எனக் கேட்டு,
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்,
பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும்,
அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப்
புகைகெழு சாந்தம் பூசுவோரும்,
15
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்,
வேர் பிணி பல் மலர் வேயுமோரும்,
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்,
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்;
வாச நறு நெய் ஆடி, வான் துகள்
20
மாசு அறக் கண்ணடி வயக்கி, வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி,
வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்;
இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர்,
கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,
25
ஓசனை கமழும் வாச மேனியர்,
மட மா மிசையோர்,
பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர்


நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்

கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும்,
வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும்,
30
விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி,
ஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல்
உரைதர வந்தன்று, வையை நீர்; வையைக்
கரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்;
நிவந்தது, நீத்தம் கரைமேலா; நீத்தம்
35
கவர்ந்தது போலும், காண்பவர் காதல்.


கண்டவர் காண வருவார்க்கு அங்கே தாம் கண்டவற்றைக் கூறல்
கூடினோர் மொழிகள் முற்றும் கேட்கப்படாமைக்குக் காரணம் உரைத்தல்

முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி
ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை
எல்லாம் தெரியக் கேட்குநர் யார்? அவை
கில்லா; கேள்வி கேட்டன சிலசில:
40
ஒத்த குழலின் ஒலி எழ; முழவு இமிழ்,
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி,
ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்;
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அத் தக அரிவையர் அளத்தல் காண்மின்.


கேட்டன கூறல்

45
'நாணாள்கொல் தோழி! "நயன் இல் பரத்தையின்
தோள் நலம் உண்டு, துறந்தான்" என, ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்,
நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?' என்மரும்,
50
'கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்
ஓட்டை மனவன்; உரம் இலி' என்மரும்,
'சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்;
நெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின் நிறை
அஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்?' என்மரும்,
55
'பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன்.
நாணாள் அவனை, இந் நாரிகை' என்மரும்


கண்டவர் காண வருவார்க்கு உவந்தவற்றைக் காட்டல்

அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப,
கமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில்
இழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி,
60
'பிழையினை' என்ன, பிழை ஒன்றும் காணான்,
தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்.
'பார்த்தாள், ஒருத்தி நினை' என, 'பார்த்தவளைப்
பொய்ச் சூளாள் என்பது அறியேன், யான்' என்று இரந்து,
மெய்ச் சூள் உறுவானை, மெல்இயல், 'பொய்ச் சூள்' என்று,
65
ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல;
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய,
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்
70
பாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர,
நில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து
மல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து,
எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்
75
வல்லதால், வையைப் புனல்.
என ஆங்கு
மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
80
நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை,
எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;
தேறித் தெளிந்து, செறி இருள் மால் மாலை;
பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;
துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்:
85
கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே
போர் அடு தானையான் யாறு.
சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,
90
அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக்
காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,
நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.


நீர்விழவின் சிறப்பு

துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று;
'புனல்' என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை;
95
உரையின் உயர்ந்தன்று, கவின்.
போர் ஏற்றன்று, நவின்று; தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று;
துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று;
விசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க.


வையையை வாழ்த்துதல்

100
இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர்,
நன்பல நன்பல நன்பல வையை!
நின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே.
புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2019 16:03:51(இந்திய நேரம்)