தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிலை ஏறட்ட கணை வீழ்

சிலை ஏறட்ட கணை வீழ்

 

289. பாலை
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
5
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்,
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
10
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி,
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப,
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
15
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி,
'நல்ல கூறு' என நடுங்கி,
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:07:45(இந்திய நேரம்)