தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன் ஓரன்ன ஆயமும்

தன் ஓரன்ன ஆயமும்

 

385. பாலை
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல்
என் ஓரன்ன தாயரும், காண,
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
5
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர,
நல் மாண் விழவில் தகரம் மண்ணி,
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்,
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
10
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,
வளையுடை முன்கை அளைஇ, கிளைய
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும்,
15
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி,
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ,
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:11:49(இந்திய நேரம்)