தேம் படு சிமயப் பாங்கர்ப்
தேம் படு சிமயப் பாங்கர்ப்
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
ஐது படு கொள்ளி அங்கை காய,
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச்
சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:15:06(இந்திய நேரம்)