தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பனி வார் உண்கணும்

பனி வார் உண்கணும்

 

359. பாலை
'பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
நீடினர்மன்னோ, காதலர்' என நீ
5
எவன் கையற்றனை? இகுளை! அவரே
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
10
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
15
அருவித் துவலையொடு மயங்கும்
பெரு வரை அத்தம் இயங்கியோரே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:28:40(இந்திய நேரம்)