Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
Primary tabs
பார்
(active tab)
What links here
மாமரம்
37. பாலை
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
5
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
10
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை,
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
15
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
மருதமர நிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார்
உரை
97. பாலை
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
5
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
10
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
15
ஆழல்' என்றி தோழி! யாழ என்
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
20
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
உரை
117. பாலை
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
5
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
10
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
15
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - .........
உரை
141. பாலை
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
5
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
10
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
15
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
20
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
25
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்
உரை
177. பாலை
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண்
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
5
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை,
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
10
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர்போலும் வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
15
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
20
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
உரை
229. பாலை
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
5
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி,
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென,
10
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்!
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப,
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி,
15
இனையல் என்றி; தோழி! சினைய
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து,
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை,
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம்
20
இன் இளவேனிலும் வாரார்,
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
உரை
341. பாலை
உய் தகை இன்றால் தோழி! பைபய,
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும்
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்;
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
5
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்,
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல்,
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி,
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
10
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன்,
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
யாணர் வேனில்மன், இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார்
உரை
348. குறிஞ்சி
என் ஆவதுகொல் தானே முன்றில்,
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
5
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்,
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி,
10
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி,
'யானை வவ்வின தினை' என, நோனாது,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
உரை
355. பாலை
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
5
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்;
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்றுஆயின், ஆனாது
10
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
'யாமே எமியம் ஆக, நீயே
பொன் நயந்து அருள் இலையாகி,
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
உரை
மேல்
Tags :
பார்வை 140
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:00:46(இந்திய நேரம்)
Legacy Page