தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எருமைவெளியனார்

எருமைவெளியனார்
273
மா வாராதே; மா வாராதே;
எல்லார் மாவும் வந்தன; எம் இல்,
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே
5
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல்
விலங்கிடு பெரு மரம் போல,
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே?
திணை தும்பை; துறை குதிரை மறம்.
எருமை வெளியனார் பாடியது.

303
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ,
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப
5
ஆட்டிக் காணிய வருமே நெருநை,
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்,
கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்
கயந்தலை மடப் பிடி புலம்ப,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.
திணையும் துறையும் அவை.
எருமை வெளியனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:01:49(இந்திய நேரம்)