தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கூகைக் கோழியார்

கூகைக் கோழியார்
364
வாடா மாலை பாடினி அணிய,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க,
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி,
5
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப,
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே!
அரியஆகலும் உரிய, பெரும!
10
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே.
திணையும் துறையும் அவை.
அவனைக் கூகைக் கோழியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:14:48(இந்திய நேரம்)