244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339, 340, 355,361
244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339,
340, 355,361
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியின்
பொலியா;
இரவல் மாக்களும்... ... ... ...
... ... ... ... ... ...
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போல, தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
............................................
செருப்பு இடைச் சிறு பரல் அன்னன்; கணைக் கால்,
அவ் வயிற்று, அகன்ற மார்பின், பைங் கண்,
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்,
செவி இறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,
யார்கொலோ, அளியன்தானே? தேரின்
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக்
காடு கைக் கொண்டன்றும், இலனே; காலை,
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி,
கையின் சுட்டிப் பையென எண்ணி,
சிலையின் மாற்றியோனே; அவைதாம்
மிகப் பலவாயினும், என் ஆம் எனைத்தும்
வெண் கோள் தோன்றாக் குழிசியொடு,
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே?
திணை வெட்சி; துறை
உண்டாட்டு.
............................................
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்
இரும் பறை இரவல! சேறிஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து,
கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில் உமிழ் கடுங் கணை மூழ்க,
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.
திணை கரந்தை; துறை
கையறுநிலை.
..............................................
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின்
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை,
கன்றுடை மரை ஆத் துஞ்சும் சீறூர்க்
கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி,
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந் நுதி
நெடு வேல் பாய்ந்த மார்பின்,
மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே.
திணை வெட்சி; துறை
உண்டாட்டு.
.............................................
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;
வேனல் வரி அணில் வாலத்து அன்ன,
கான ஊகின் கழன்று உகு முது வீ
அரியல் வான் குழல் சுரியல் தங்க,
நீரும் புல்லும் ஈயாது, உமணர்
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர்
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு,
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து,
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என,
பண் கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே.
திணை தும்பை; துறை
களிற்றுடனிலை.
.............................................
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள்
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே.
............................................
................டார் கிழார்
பாடியது.
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில் விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச்
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி,
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே.
............................................
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த
புன் புலச் சீறூர், நெல் விளையாதே;
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
................. டு அமைந்தனனே;
அன்னன் ஆயினும், பாண! நன்றும்
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட....
களவுப் புளி அன்ன விளை....
..............வாடு ஊன் கொழுங் குறை
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு,
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு
... ... ... ... .... ... தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை
முயல் வந்து கறிக்கும் முன்றில்,
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.
பங்கு
............................. பாடியது.
நீருள் பட்ட மாரிப் பேர் உறை
மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண,
கரும் பிடர்த் தலைய, பெருஞ் செவிக் குறு முயல்
உள் ஊர்க் குறும் புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்,
'உண்க' என உணரா உயவிற்று ஆயினும்,
தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்;
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென,
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்,
குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து,
சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர்
வேட்டக் குடிதொறும் கூட்டு
.............................................. உடும்பு
செய்
பாணி நெடுந் தேர் வல்லரோடு ஊரா,
வம்பு அணி யானை வேந்து தலைவரினும்,
பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே.
............................................
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர்
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து;
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தல் பூக்குறூஉந்து;
பைந் தழை துயல்வரும் செறு விறற..............
..............................................லத்தி
வளர வேண்டும், அவளே, என்றும்
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி,
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.
............................................
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக்
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்,
....................... ல் என வினவுதி, கேள், நீ:
எடுப்பவெ...,............................................
..........................மைந்தர் தந்தை
இரும் பனை அன்ன பெருங் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.
திணையும் துறையும் அவை.
அ............................... பாடியது.
மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,
நீஇர் இன்மையின், கன்று மேய்ந்து உகளும்;
............................................
..............................................
..............................................
கார் எதிர் உருமின் உரறி, கல்லென,
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத்
தாயின் நன்று பலர்க்கு ஈத்து,
தெருள் நடை மா களிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,
உருள் நடை ........................ான்றதன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்,
புரி மாலையர் பாடினிக்குப்
பொலந் தாமரைப் பூம் பாணரொடு
கலந்து அளைஇய நீள் இருக்கையால்
பொறையொ............ மான் நோக்கின்,
வில் என விலங்கிய புருவத்து, வல்லென
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென
............................................பொலங்கலத்து
ஏந்தி,
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன்,
நில்லா உலகத்து............... மை நீ
சொல்ல வேண்டா................. முந்தறிந்த
.............................................
............................................னார்
பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:41:41(இந்திய நேரம்)