Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
தந்து மாறன்
தந்து மாறன்
Primary tabs
பார்
(active tab)
What links here
முகப்பு
தொடக்கம்
தந்து மாறன்
360
பெரிது ஆராச் சிறு சினத்தர்,
சில சொல்லான் பல கேள்வியர்,
நுண் உணர்வினான் பெருங் கொடையர்,
கலுழ் நனையான் தண் தேறலர்,
5
கனி குய்யான் கொழுந் துவையர்,
தாழ் உவந்து தழூஉ மொழியர்,
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி,
ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள், இனி: நாளும்,
10
பலரே, தகையஃது அறியாதோரே;
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்,
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சு வரப்
15
பாறு இறை கொண்ட பறந்தலை, மா கத
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி,
புலையன் ஏவ, புல் மேல் அமர்ந்து உண்டு,
20
அழல் வாய்ப் புக்க பின்னும்,
பலர் வாய்த்து இராஅர், பருத்து உண்டோரே.
திணையும் துறையும் அவை.
தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடியது.
உரை
361
கார் எதிர் உருமின் உரறி, கல்லென,
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
5
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத்
தாயின் நன்று பலர்க்கு ஈத்து,
தெருள் நடை மா களிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,
உருள் நடை ........................ான்றதன்
10
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்,
புரி மாலையர் பாடினிக்குப்
பொலந் தாமரைப் பூம் பாணரொடு
கலந்து அளைஇய நீள் இருக்கையால்
பொறையொ............ மான் நோக்கின்,
15
வில் என விலங்கிய புருவத்து, வல்லென
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென
............................................பொலங்கலத்து ஏந்தி,
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன்,
20
நில்லா உலகத்து............... மை நீ
சொல்ல வேண்டா................. முந்தறிந்த
....................................................
...............................................னார் பாடியது.
உரை
362
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரள,
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப,
பொழிலகம் பரந்த பெ.................
5
.......................கும விசய வெண் கொடி
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை,
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்,
ஆக் குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறைக் குறி .......................... யின்
10
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின்
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ,
கை பெய்த நீர் கடற் பரப்ப,
ஆம் இருந்த அடை நல்கி,
சோறு கொடுத்து, மிகப் பெரிதும்
15
வீறு சான......................... நன்றும்
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்,
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்,
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு,
20
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி,
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே.
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
உரை
363
இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மா நிலம்
உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக்
5
காடு பதி ஆகப் போகி, தம்தம்
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
10
கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு,
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
15
நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும்
இன்னா வைகல் வாராமுன்னே,
செய் நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே.
திணையும் துறையும் அவை.
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.
உரை
364
வாடா மாலை பாடினி அணிய,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க,
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி,
5
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப,
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே!
அரியஆகலும் உரிய, பெரும!
10
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே.
திணையும் துறையும் அவை.
அவனைக் கூகைக் கோழியார் பாடியது.
உரை
Tags :
தந்து மாறன்
பார்வை 260
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:11:14(இந்திய நேரம்)
Legacy Page