தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெட்சி

வெட்சி
257
செருப்பு இடைச் சிறு பரல் அன்னன்; கணைக் கால்,
அவ் வயிற்று, அகன்ற மார்பின், பைங் கண்,
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்,
செவி இறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,
5
யார்கொலோ, அளியன்தானே? தேரின்
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக்
காடு கைக் கொண்டன்றும், இலனே; காலை,
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி,
கையின் சுட்டிப் பையென எண்ணி,
10
சிலையின் மாற்றியோனே; அவைதாம்
மிகப் பலவாயினும், என் ஆம் எனைத்தும்
வெண் கோள் தோன்றாக் குழிசியொடு,
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே?
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
.............................................................................

258
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த
5
எச்சில் ஈர்ங் கை வில்புறம் திமிரி,
புலம் புக்கனனே, புல் அணல் காளை;
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி, முது கள் சாடி;
10
ஆ தரக் கழுமிய துகளன்,
காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே.
திணையும் துறையும் அவை.
......................உலோச்சனார் பாடியது.

262
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப்
புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின் நின்று,
5
நிரையொடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே.
திணை வெட்சி; துறை உண்டாட்டு; தலைத்தோற்றமும் ஆம்.
....................மதுரைப் பேராலவாயார் பாடியது.

269
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல் காழ் மாலை
மை இரும் பித்தை பொலியச் சூட்டி,
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர்
5
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை,
உவலைக் கண்ணித் துடியன் வந்தென,
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி;
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில்
10
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர்,
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப,
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே.
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
ஒளவையார் பாடியது.

297
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின்
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை,
கன்றுடை மரை ஆத் துஞ்சும் சீறூர்க்
5
கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி,
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந் நுதி
நெடு வேல் பாய்ந்த மார்பின்,
10
மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே.
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
...........................................................................

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:00:27(இந்திய நேரம்)