தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆர்கலியினனே, சோணாட்டு அண்ணல்

ஆர்கலியினனே, சோணாட்டு அண்ணல்
337
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும்,
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்,
வரல்தோறு அகம் மலர,
5
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப்
பாரி பறம்பின் பனிச் சுனை போல,
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென
10
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு,
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே,
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி,
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும்
15
கடுங்கண் யானை காப்பனர் அன்றி,
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர்
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்;
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென
20
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை
உருத்த பல சுணங்கு அணிந்த
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே?
திணையும் துறையும் அவை.
கபிலர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:47:59(இந்திய நேரம்)